முன்னணி நடிகையாக இருந்து வந்த ஸ்ரேயா, தமிழில் சூப்பர் ஸ்டார் வரை நடித்து விட்டார். இவர் கடைசியா நடித்த படம் என்றால் நடிகர் சிம்பு நடித்த “AAA ” படம் தான். அதன் பின்னர் இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை .தற்போது தனது நீண்டநாள் காதலரை திருமணம் செய்து கொண்டு சட்டலே ஆகிவிட்டார்.
நடிகர் சிம்பு நடித்த “AAA ” படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து. மேலும் இந்த படத்தின் இயக்குனர் அஸ்வின் க்ஸிம்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். சிம்பு சரியாக படப்பிடிப்பிற்கு வருவதில்லை எனவும், அவரால் நான் மிகவும் சிரம பட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ள அந்த படத்தில் கதாயாகியாக நடித்த ஷ்ரேயா “நான் ஒரு சில தமிழ் படங்களை தேர்வு செய்வதில் தவறு செய்து விட்டேன், முதலில் படத்தின் கதை என்று ஒன்றை கூறுகின்றனர். பின்னர் அவர்கள் இஷ்டத்திற்கு ஏற்ப படத்தின் கதையை மாற்றிக்கொள்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
AAA படத்தின் அஷ்வினும் இது போன்ற விமர்சனத்தை சிம்பு மீது ஏற்கனவே வைத்திருந்தார். இந்நிலையில் ஸ்ரேயா இந்த படத்தில் தான் கடைசியா கதாநாயகியை கடைசியா நடித்திருந்தார். எனவே நடிகை ஸ்ரேயா அந்த படத்தில் நடித்தது பற்றி தான் மறைமுகமாக கூறுகிறாரே என்று அனைவரும் சந்தேகத்தில் உள்ளனர்.