சிறுத்தை படத்துக்கு அப்புறம் இதனால தான் நடிக்கல – முதல் முறையாக தமிழில் பேட்டி கொடுத்த சிறுத்தை பட சிறுமி.

0
968
Rakshana
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் சிவா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த சிறுத்தை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தை கார்த்தி, தமன்னா, சந்தானம், பேபி ரக்ஷனா, அவினாஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் தெலுங்கு மொழியில் வெளிவந்த விக்ரமர்குடு என்ற படத்தின் தழுவல். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக பேபி ரக்ஷனா திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

-விளம்பரம்-

இந்நிலையில் தற்போது அவரின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்து பலரும் வாயை பிளந்து உள்ளார்கள். குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் நடித்து வந்த ரக்ஷனா அவர்கள் தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் அளவிற்கு முன்னேறி உள்ளார். இவர் சிறுத்தை படத்திற்குப் பிறகு ஓகே கண்மணி, பாண்டிய நாடு ,கடல் , த்ரிஷா இல்லனா நயன்தாரா , நிமிர்ந்து நில் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

ரக்ஷனா நேர்காணலில் கூறியது :

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய பேபி ரக்ஷனா கூறுகையில் “நான் என்னுடைய மூன்றரை வயதில் இருந்து நடிக்கிறேன், இடையில் சில காலம் பரதநாட்டியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதினால் சினிமாவில் இருந்து விலகியிருந்தேன். ஆனால் அந்த சமயத்தில் பரதநாட்டியம் கற்றுக்கொண்டு விளம்பரங்களில் நடித்து கொண்டிருந்தேன். தற்போது நான் 11ஆம் வகுப்பு முடிந்து 12ஆம் வகுப்பு செல்ல இருக்கிறேன் என்றார்.

மேலும் சிறுத்தை படத்தில் வாய்ப்பு கிடைத்தற்கு காரணம், அந்த படத்திற்கு முன்னர் ஒரு விளம்பரத்தில் நடித்திருந்தேன் அதனை பார்த்து இயக்குனர் சிவா ஆடிஷன் நடத்தினர். அதற்கு பின்னர் அதில் கலந்துகொண்டு தேர்வாகி பின்னர் தான் சிறுத்தை படத்தில் நடித்தேன். அப்போது எனக்கு மூன்றரை வயது தான் ஆனாது. சிறுத்தை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நான் மிகவும் விருப்பப்பட்டு நடித்தேன். நடிகர் கார்த்தி அவர்கள் மிகவும் தன்னடக்கமான ஒரு மனிதர். என்னுடை பிறந்தநாளின் போது கூட வீட்டிற்கு பரிசுகளுடன் வந்திருந்தார்.

-விளம்பரம்-

படத்திலும் அதிக முறை ஒரே காட்சியை எடுக்க சூழ்நிலை வந்தாலும் கூட அவர் சலிக்காமல் ஒப்புக்கொண்டார். நான் ஓகே கண்மணி படத்திற்கு முன்னரே இயக்குனர் மணிரத்தினம் அவர்களுடன் “கடல்” படத்தில் கதாநாயகியின் சிறிய வயது கதாபாத்திரமாக நடித்திருந்தேன். அதனை பார்த்துதான் எனக்கு ஓகே கண்மணி படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்த துல்கர் சல்மான் அவர்களும் தன்னடக்கம் உள்ள மனிதர் தான், அந்த படத்தில் அதிகமான காட்சிகள் எனக்கு இல்லை என்றாலும் அந்த பதில் பலவற்றை நான் கற்றுக்கொண்டேன்.

அதற்கு பிறகு இலங்கை தமிழ் படமான “யாழ்” என்ற படத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தில் நடித்து முற்றிலும் ஒரு மாறுபட்ட அனுபவத்தை கொடுத்தது. ஏன் என்றால் மற்ற படங்களை போல இல்லாமல் நானே அதிக முயற்சி செய்த படம் என்றால் அது அந்த படம் தான். அதற்கான பலனையும் என்னால் படத்தில் காண முடிந்தது என்றார். தற்போது என்னுடைய கவனம் முழுவதும் படிப்பின் மீது இருக்கிறது. படித்து முடித்தும் நல்ல படங்களில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என தெரிவித்தார் பேபி ரக்ஷனா.

Advertisement