அன்று மைக் மோகன் இன்று சிவகார்த்திகேயன் – வீழ்ச்சியின் ஆரம்பமா ? என்ன நடக்கிறது ?

0
625
- Advertisement -

சிவகார்த்திகேயன் குறித்து இசையமைப்பாளர் இமான் கூறிய சர்ச்சையான கருத்துக்கு பலரும் கொடுத்து வரும் விமர்சனம் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இசை அமைப்பாளராக திகழ்பவர் டி.இமான். இவர் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வெளியாகி இருக்கிறது. இவர் பல முன்னணி வெளியாகி படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். தற்போது இவர் படங்களில் பிசியாக பணியாற்றி வருகிறார். அதோடு கிராம கதையம்சம் கொண்ட கதைக்கு தான் இவர் அதிகம் இசை அமைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Imman

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் டி இமான் அவர்கள் சிவகார்த்திகேயன் குறித்து கூறியிருந்தது, மனம் கொத்தி பறவை படத்தில் தான் எங்களுடைய பயணம் ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, எங்கள் வீட்டுப்பிள்ளை போன்ற பல படங்களுக்கு நான் இசையமைத்து இருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் அவர் முதன்முறையாக என்னுடைய இசையில் தான் பாடினார். ஆனால், இனி அவருடன் நான் பயணிக்க போவதில்லை. இந்த ஜென்மத்தில் இனி சேர்ந்து நாங்கள் பயணம் செய்வது ரொம்ப கஷ்டமான விஷயம்.

- Advertisement -

சிவகார்த்திகேயன் குறித்து சொன்னது:

காரணம், எனக்கு சிவகார்த்திகேயன் மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார். அதை என்னால் வெளியில் சொல்ல முடியாது. அந்த வலியும் வேதனையும் எனக்கு அதிகமாகவே இருந்தது என்று கூறி இருந்தார். இப்படி டி.இமான் வெளிப்படையாக பேசி இருந்தது குறித்து பலரும் பல விதமான கருத்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். இதனை அடுத்து இமானின் முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ததற்கு காரணம் சிவகார்த்திகேயன் என்றும் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு சிவகார்த்திகேயன் தான் என்றும் கூறி இருக்கிறார்கள்.

மோனிகா ரிச்சர்ட் கொடுத்த விளக்கம்:

பின் இது தொடர்பாக மோனிகா ரிச்சர்ட், எங்களுடைய விவாகரத்திற்கு சிவகார்த்திகேயன் சமாதானம் தான் செய்தார். ஆனால். அவரை துரோகி என்று இமான் கூறக்கூடாது. அவர் தன்னுடைய சுயநலத்திற்காக இப்படியெல்லாம் பேசுகிறார். இமான் பப்ளிசிட்டிக்காக இப்படியெல்லாம் பேசி இருக்கிறார் என்று சொன்னார். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தது உண்மைதான் என்று பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், வலைப்பேச்சு மிஸ்கி வலைப்பேச்சு அந்தணன் ஆகியோரெல்லாம் சோசியல் மீடியாவில் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

சோசியல் மீடியா சர்ச்சை:

இதனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் அயலான் படம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இன்னும் சிலர், நடிகர் சிவகார்த்திகேயன் மேலிருக்கும் பொறாமையால் தான் இப்படி எல்லாம் சொல்கிறார்கள், அவருடைய மார்க்கெட்டை காலி செய்ய தான் இப்படி செய்கிறார்கள். தொடர்ச்சியாக அவர் படங்களில் நடித்து வருகிறார். அவருடைய படங்களும் கோடிக்கணக்கில் வசூல் செய்துள்ளது. இதை காலி செய்வதற்கு தான் இப்படி எல்லாம் சர்ச்சை கிளப்பி இருக்கிறார்கள். இதே போல் 80ளில் முன்னணி நடிகராக இருந்த மைக் மோகனையும் காலி செய்தார்கள்.

mohan

மைக் மோகன் குறித்த தகவல்:

அவர் ரஜினி கமலஹாசனை விட மிகப் பிரபலமான நடிகராக இருந்தார். அவர் பெண்கள் விஷயத்தில் வீக், அவருக்கு எய்ட்ஸ் இருக்கிறது, அவருக்கு தீர்க்க முடியாத வியாதி இருக்கிறது என்றெல்லாம் வதந்திகளை பரப்பி அவருடைய சினிமா வாழ்க்கையை காலி செய்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மைக் மோகன் படங்களில் நடிக்க இருக்கிறார். இதேதான் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் செய்கிறார்கள் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Advertisement