சினிமாவை நம்பி அரசு வேலையை விட்டு தற்போது வாய்ப்பில்லாமல் தவித்து வரும் சிவகார்த்திகேயன் பட நடிகர்.

0
1811
kanthasamy
- Advertisement -

சினிமாவை பொறுத்து வரை அனைவருக்கும் வாழ்க்கை சரியாக அமைந்துவிடுவது இல்லை. குறிப்பாக எத்தனையோ துணை நடிகர்களின் நிலை பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கதைகளை நாம் பலவற்றை கேட்டுள்ளோம். அதிலும் இந்த கொரோனா வந்ததில் இருந்து பலரும் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். அதே போல கொரோனா பிரச்சனையால் சினிமா துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. பெரிய நடிகர்கள் இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பினாலும் சினிமாவை நம்பியுள்ள துணை நடிகர்கள் பலரின் நிலையை இந்த கொரோனா ஊரடங்கு பெரிதும் சோதனைக்கு உள்ளாகியுள்ளது.

-விளம்பரம்-

கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா படப்பிடிப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்காக சினிமா துறையை சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடு காரணமாக கொரோனா முதல் அலை வரை முதல் தற்போது வரை பட வாய்ப்புகள் இன்றி பொருளாதாரத்தை இழந்து தனது குடும்பம் வறுமையில் வாடி வருவதாக  காமெடி நடிகர் ஹலோ கந்தசாமி வேதனையுடன் தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

பூ படத்தின் வாய்ப்பு :

ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான பூ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் கந்தசாமி. இந்த படத்திற்கு பின்னர் தான் இவருக்கு ஹலோ கந்தசாமி என்ற பெயரும் வந்தது. பூ படத்திற்கு பின்னர், மைனா, புலிக்குத்தி பாண்டி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என்று பல படங்களில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள இவர், கொரோனா ஊரடங்கள் பட வாய்ப்பு குறைந்ததால் வறுமையில் வாடி வருதாக கூறி இருந்தார்.

நடிப்பிற்கும் திறமைக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை :

எனது நடிப்பிற்கும் திறமைக்கும் உரிய அங்கீகாரமோ, அரசு விருதுகள் கிடைக்கவில்லை. நடிகர்களுக்கு நிவாரண உதவி அரசு அளிக்க வேண்டும். இந்த கொரோனாவால் என்னை போன்ற நிறைய கலைஞர்கள் மிகவும் பொருளாதார பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கலைஞர்களுக்கு எல்லாரும் முடிந்த அளவிற்கு உதவி செய்யுங்கள் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

அரசு வேலையை விட்ட காரணம் :

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள கந்தசாமி, தான் ஆரம்பத்தில் வங்கியில் வேலை செய்து வந்ததாகவும் பின்னர் அந்த வேலையைவிட்டுவிட்டு தான் சினிமா வில் நடிக்க வந்ததாகவும் கூறி இருக்கிறார். அதுவும் ரஜினி முருகன் படத்தில் பாத ஜோசியம் காமெடி மூலம் கிடைத்த பிரபலத்திற்கு பின்னர் தான் வேலையை விட்டதாகவும் கூறியுள்ளார். சமீபத்தில் வெளிவந்த நயன்தாராவின் O2 படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனின் பண்பு :

அதே போல நெஞ்சுக்கு நீதி படத்தின் விழா ஒன்றில் பங்கேற்ற போது சிவகார்த்திகேயன் வந்த போது அவரை பார்த்து வணக்கம் சொல்லி பேசிய போது அவர் பழையபடி அண்ணா எப்படி இருக்கீங்க என்று கேட்டதாகவும் அவருடைய பண்பை தான் மிகவும் மதிப்பதாகவும் கூறியுள்ளார் கந்தசாமி. இனி வரும் காலங்கள் நிறைய படங்களில் வாய்ப்பை எதிர் நோக்கி காத்துகொண்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement