தனுஷ், விஜய் சேதுபதியை தொடர்ந்து  விரைவில் பாலிவுட்டில் கால்பதிக்க உள்ள சிவகார்த்திகேயன் – வெளியான அப்டேட்.

0
1048
Sivakarthikeyan
- Advertisement -

சிவகார்த்திகேயன் விரைவில் பாலிவுட்டில் கால் பதிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. எளிய பின்னணியிலிருந்து வந்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் ஹீரோயிசத்திற்கு மட்டுமில்லை அவரது நகைச்சுவை திறனுக்கும் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது தமிழ் சினிமா உலகில் கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, பாடலாசிரியர், தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து இருந்த டாக்டர், டான் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக பிரின்ஸ் படம் தான் வெளிவந்தது.

- Advertisement -

மாவீரன் படம்:

இந்த படத்தில் மரியா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இதனை அடுத்து தற்போது சிவகார்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்து இருக்கிறார்.

படத்தின் ஆடியோ&ட்ரைலர் வெளியீட்டு விழா:

சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 14ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கட்டிருந்தது. அதிலும் சிவகார்த்திகேயன் பாடிய வண்ணாரப்பேட்டை பாடல் சோசியல் மீடியாவில் வெளியாகி பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகி இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு தான் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று இருக்கிறது. தற்போது இந்த படத்தினுடைய பிரமோஷன் பணிகளில் பட குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் அதிவி சேஷ்:

அந்த வகையில் ஹைதராபாத்தில் இந்த படத்திற்கான ப்ரோமோஷன் நடைபெற்ற. இந்த நிகழ்வில் தெலுங்கு நடிகர் அதிவி சேஷ், பிரின்ஸ் திரைப்பட இயக்குனர் அனுதீப் உட்பட பல திரைப்படங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். அப்போது நிகழ்ச்சியில் நடிகர் அதிவி சேஷ் கூறியிருப்பது, சிவகார்த்திகேயன் ஒரு பெரிய நடிகர் மட்டும் இல்லாமல் பெரிய மனம் படைத்தவர் என்பதை நான் தெரிந்து கொண்டேன். தெலுங்கை தொடர்ந்து அவர் தற்போது பாலிவுட்டிலும் அறிமுகமாக இருக்கிறார் என்று கூறினார்.

பாலிவுட்டில் சிவகார்த்திகேயன்:

பின் அவர் சிவகார்த்திகேயனை பார்த்து சாரி சார்! இந்த செய்தியை பிரேக் செய்து விட்டேன் என்று கூறினார். அதற்கு சிவகார்த்திகேயனும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இருந்தார். இப்படி இவர் பேசியிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. மேலும், தமிழ்- தெலுங்கை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பாலிவுட்டில் கால் பதிக்க இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை அடுத்து பாலிவுட் படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement