அன்று அப்பாவை கடன் வாங்க விடாமல், டாக்டர் ஆகிய சிவகார்த்திகேயனின் அக்கா – இன்று அவருக்கு கிடைத்த விருது.

0
1140
sivakarthikeyan
- Advertisement -

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அக்காவிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிறந்த மருத்துவருக்கான விருது வழக்கப்பட்டு இருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன், தனது பயணத்தை ஒரு தொகுபகிளராகவும் ,காமடியனாகவும்  தனது கலை பயணத்தை தொடங்கியவர். தன்னுடைய கடின உழைப்பால் சினிமாவில் ஒரு இமாலய இடத்தை பிடித்துள்ளார். சினிமாவில் இருந்தபோதே சினிமாவில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று கிடைத்த வாய்ப்பையேல்லாம் பயன்படித்தி இன்று சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

இவரது நடிப்பில் வெளியான பல படங்கங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால், இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் மாபெரும் தோல்வியை தழுவியது. இதுவரை சிவகார்த்திகேயன் பல விருது வழங்கும் விழாவில் தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்து வந்திருக்கிறார். மேலும் சிவகார்த்திகேயன் எந்த ஒரு மேடையில் விருதை வாங்கினாலும் எந்த மறைந்த தந்தையை பற்றி பேசாமலும் இருந்தது இல்லை.

- Advertisement -

ஆனால், இதுவரை அவரது தாய் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் பெரும்பாலும் கலந்து கொண்டது கிடையாது. அதே போல நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அக்கா இருப்பதும் கொஞ்ச நாள் முன்பே அனைவருக்கும் தெரியவந்தது. இந்நிலையில் கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரமெடுத்த சிவா அந்த சமயத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி ஒன்றை அளித்து இருந்தார்.

இந்த பேட்டியில் அவரது அக்காவும் வந்திருந்தார். அப்போது பேசிய சிவா, என்னுடைய அக்கா டாக்டர் ஆக வேண்டும் என்று எனது அப்பா 15 லட்ச ரூபாய் கடன் வாங்கினார். அப்போது அட்மிஷன்காக கல்லூரி வரை எனது அப்பாவும் அக்காவும் சென்றுவிட்டனர். ஆனால், அங்கு என்னுடைய அக்கா எனது அப்பாவிடம் நான் அடுத்த வருடம் ஒழுங்காக படித்து மெரிட்டில் சேர்ந்து விடுகிறேன் என்று சொல்லிட்டால்.

-விளம்பரம்-

ஆனால், அவள் சொன்னது போலவே அடுத்த ஆண்டு கவுன்சிலிங் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்தால். இதனால் நாங்கள் 15 லட்ச ரூபாய் கடனிலிருந்து தப்பினோம். ஆனால், அதன் பின்னர் சிறுது காலத்தில் என் அப்பா இறந்து விட்டார். என் அப்பாவிற்கு நான் எதுவும் செய்தது இல்லை ஆனால், என் அக்கா என் அப்பாவை பெருமைப்பட வைத்துள்ளார் என்று நெகிழ்ச்சியுடன் கூறி இருந்தார் சிவகார்த்திகேயன். .

கடந்த சில வருடங்களாக சிவகார்த்திகேயனின் அக்கா  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் அக்காவிற்கு இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் சிறந்த மருத்துவர் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள சிவர்கார்த்திகேயன்”எல்லோருக்கும் குடியரசு தின வாழ்த்துகள். எங்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாள். சிறந்த மருத்துவர் விருதுக்காக வாழ்த்துகள் அக்கா. எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. அப்பா நிச்சயம் பெருமைகொள்வார். உனது நேர்மையும், உழைப்பும் உன்னை நல்ல நிலைக்கு உயர்த்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.’

Advertisement