‘என் பேபி, என் முயல்குட்டி’ – தியார் ஜெயிலில் இருந்து ஜாக்லினுக்கு உருகி உருகி கடிதம் எழுதியுள்ள மேசடி மன்னன் சுரேஷ்.

0
437
Suresh
- Advertisement -

‘என் பேபி, என் முயல் குட்டி’ என்று தன் காதலியை நினைத்து உருகி உருகி சிறையில் இருந்து கொண்டே சுகேஷ் எழுதியிருக்கும் கடிதம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அகில இந்திய அளவில் அரசியல் புரோக்கராக செயல்பட்டு வந்தவர் சுகேஷ் சந்திரசேகர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப்பின் இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொடுப்பதற்காக 50 கோடி லஞ்சமாக பெற்றதாக சுகேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து 2019ஆம் ஆண்டு அவரை திகார் ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவத்தை அடுத்து சுகேஷ் சட்டவிரோதமாக பல வழிகளில் பணம் பரிமாற்றம் செய்து இருப்பதாக தெரியவந்தது.

-விளம்பரம்-

இதனைத்தொடர்ந்து சுகேஷ் மீது வலுவான பல வழக்குகள் விழுந்தது. மேலும், இவர் அனைத்து அரசியல் கட்சியினருடன் நெருங்கிய தொடர்பை வைத்துக் கொண்டு அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தது தெரியவந்தது. அதோடு சுகேஷ் சந்திரசேகரன் உடன் சேர்ந்து பல்வேறு முறை கேடுகளில் ஈடுபட்டதாக அவருடைய காதலி ஜாக்கி பெர்னான்டஸ் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டும் இல்லாமல் சுகேஷ் சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும், டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

- Advertisement -

சுகேஷ் சந்திரசேகர் செய்த மோசடி:

அதனடிப்படையில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் இந்த மோசடியில் தொடர்புடைய அவரது காதலி மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. மேலும், இந்த வழக்கில் சுகேஷ் மற்றும் அவருடைய காதலியும், நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது அமலாக்கத்துறை சார்பில் 700 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில் சுகேஷ் தனது காதலி ஜாக்குலினுக்கு கொடுத்த பல கோடி மதிப்புள்ள பரிசுகளும் அடங்கும். இதனை தொடர்ந்து குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டது அடுத்து ஜாக்லின் நாட்டை விட்டு வெளியேற நினைத்தார்.

ஜாக்குலின் மீது விசாரணை:

இதை அறிந்த போலீஸ் ஜாக்லினை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தியிருந்தது. அதில் ஜாக்குலின், சுகேஷை நான் இரண்டு முறை தான் சந்தித்தேன். அவர் பல கோடி பட்ஜெட்டில் என்னை வைத்து படம் எடுக்க இருப்பதாக கூறியிருந்தார். அவரால் என்னுடைய வாழ்க்கை நரகம் ஆகிவிட்டது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ஜாக்குலினுக்கு சுகேஷ் எழுதியிருக்கும் திஹார் சிறையில் இருந்து காதல் கடிதம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.

-விளம்பரம்-

சுகேஷ் எழுதிய கடிதம்:

அதாவது, சமீபத்தில் முடிந்த ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சுகேஷ் தன்னுடைய காதலியும், நடிகையுமான ஜாக்குலினுக்கு வாழ்த்து கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார். அதில் அவர், மை பேபி, என் முயல் குட்டி அடுத்த ஈஸ்டரை இதற்கு முன்பு கொண்டாடிய ஈஸ்டர்களை விட மிகவும் சிறந்ததாக மாற்றுவேன். உங்களுக்கு மிகவும் பிடித்த விழாவில் உங்களை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். இந்த வருடத்தில் இது உங்களுக்கு மிகவும் பிடித்தமான திருவிழா. இதில் உங்களுடன் இல்லாமல் உங்களை ரொம்ப மிஸ் செய்கிறேன்.

ஜாக்குலின் குறித்து சொன்னது:

நீங்கள் ஈஸ்டருக்கு முட்டையை உடைப்பதை பார்க்காமல் மிஸ் செய்கிறேன். என் பேபி, நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் என்று உனக்கு ஏதாவது யோசனை இருக்கிறதா? இந்த பூமியில் உன்னை போல் யாரும் அழகாக இல்லை. மை பேபி, என் முயல் குட்டி உன்னை காதலிக்கிறேன். நான் உன்னை பற்றி நினைக்காத நேரம் இல்லை. உன்னுடைய அழகான இதயத்தில் என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியும். அது உனக்கும் அப்படித்தான் என்று எனக்கு தெரியும் என்று கூறி இருந்தார். இப்படி சுகேஷ் எழுதிய இந்த கடிதத்தை சுக்கேஷின் வழக்கறிஞர் வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இதற்கு முன்பும் தன்னுடைய பிறந்தநாள் அன்று சுகேஷ் உருகி உருகி காதல் கடிதம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஆனால், சுகேஷ் வெளியிட்ட எந்த கடிதங்களுக்கும் ஜாக்லின் எந்த ஒரு பதிலையும் தெரிவிக்கவில்லை.

Advertisement