கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த தமன்னா. ரசிகர்கள் செயலால் கடுப்பாகிய தருணம்.

0
1533
- Advertisement -

கூட்டல் நெரிசலில் நடிகை தமன்னா சிக்கி தவிக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தமன்னா. தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடித்த ‘கேடி’ படத்தின் மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர் நடிகை தமன்னா. ஆனால், அதற்கு முன்பாகவே இவர் 2005 ஆம் ஆண்டு இந்தி படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார்.

-விளம்பரம்-

அதன் பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என பிற மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். அதிலும் சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியான “பாகுபலி” படத்தின் மூலம் தான் நடிகை தமன்னாவிற்கு சினிமா மார்க்கெட் எங்கேயோ சென்றது.

- Advertisement -

தமன்னா திரைப்பயணம்:

கடைசியாக இவர் விஷால் நடிப்பில் வெளியாகி இருந்த ஆக்சன் என்ற படத்தில் தான் தமிழில் நடித்திருந்தார். சமீப காலமாகவே இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். பின் சமீபத்தில் ஹிந்தியில் தமன்னா நடித்திருந்த படம் பப்ளி பவுன்சர். இந்த படத்தில் இவர் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார். இதனை அடுத்து தமன்னா அவர்கள் ஹிந்தியில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதோடு இவர் சில வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.

தமன்னா நடிக்கும் படங்கள்:

தற்போது தமன்னா அவர்கள் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் என்ற நடிப்பில் நடித்திருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இவர் ஜீ கர்தா என்ற தொடரிலும் தமன்னா நடித்திருக்கிறார். தற்போது தமன்னா அவர்கள் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற வெப் தொடரில் நடித்து இருக்கிறார். இதில் விஜய் வர்மா, கஜோல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

லஸ்ட் ஸ்டோரீஸ் 2:

இந்த வெப் தொடர் ஜுன் 29ந் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. தற்போது இந்த வெப் தொடருக்கான ப்ரொமோஷன் பணிகளில் மும்முரமாக தமன்னா ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள லூலு மாலில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை தமன்னா பங்கேற்று இருந்தார். அதில் அவர் வெள்ளை நிற உடையில் தேவதை போல் காட்சியளித்திருந்தார். பின் இவர் ரசிகர்களிடம் பேசி அவர்கள் கேட்கும் கேள்விக்கு சந்தோஷமாக பதில் அளித்து இருந்தார்.

ரசிகர்கள் செய்த செயல்:

இதனை அடுத்து நிகழ்ச்சி முடிந்ததும் ரசிகர்கள் தமன்னாவை சூழ்ந்து செல்ஃபி எடுத்திருக்கிறார்கள். தமன்னாவும் ரசிகர்களுடன் சிரித்த படியே செல்பி எடுத்து இருக்கிறார். ஆனால், ரசிகர்களின் கூட்டம் அதிகமானதால் தமன்னாவை ஒருவர் தொட்டு அழைத்து இருகிறார். இதனால் கோபப்பட்ட தமன்னா தொடாதீர்கள் என்று கத்தி சத்தம் போட்டு இருக்கிறார். கூட்டம் அதிகமாக இருந்தால் தமன்னாவிடம் தவறாக நடந்த நபர் என்று யார் தெரியவில்லை. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement