ஷூட்டிங்கில் நேர்ந்த சம்பவத்தால் கால் செயலிழந்து விட்டது- பில்லா 2 பட நடிகரின் தற்போதைய நிலை – வீடியோ இதோ.

0
6818
- Advertisement -

தமிழ் சினிமா உலகிற்கு ரேணிகுண்டா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தீப்பெட்டி கணேசன். இவரது இயற்பெயர் கார்த்திக். தீப்பெட்டி கணேசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் இவரை அனைவரும் தீப்பெட்டி கணேசன் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அதற்கு பிறகு அஜித்தின் பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா செய்யும் பணியில் சேர்ந்தார். பின் இவர் உடலில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இவர் வேலைக்கு செல்ல முடியாமல் அன்றாட பிழைப்பிற்கு தவித்து வருகிறார்.

-விளம்பரம்-

தீப்பெட்டி கணேசனுக்கு திருமணமாகி 2 மகன்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து வறுமையில் வாடி வரும் தீப்பெட்டி கணேசனுக்கு தற்போது கொரோனா லாக்டவுனில் எந்த வித வருமானமும் இல்லாததால் ஒரு வேளை உணவிற்கு மொத்த குடும்பமும் தவித்து வருகிறது. சமீபத்தில் கூட நடிகர் விஷால் அவர்கள் ஒரு மாதத்திற்கான மளிகை சாமான் அனுப்பிவைத்து இருந்தார். அதற்க்கு நன்றி கூறி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : பணமாகவும் இல்லை, பொருளாகவும் இல்லை. விஜய் இப்படி தான் உதவி செய்ய போகிறாரா?

- Advertisement -

இந்நிலையில் தற்போது தீப்பெட்டி கணேசன் தல அஜித்திடம் உதவி கேட்டு நெஞ்சை உருக்கும் அளவிற்கு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார் அதில் அவர் கூறியிருப்பது, அஜித்தை சந்திக்க பல முறை முயற்சி செய்தேன். ஆனால், அவரை சுற்றி இருப்பவர்கள் என்ன விடவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரும் தீப்பெட்டி கணேசன் என்று தான் கூப்பிடுவார்கள். நான் எவ்வளவோ படங்கள் நடித்து விட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் கார்த்திக் என என் பெயரை கூப்பிட்ட ஒரே கடவுள் அஜித் சார் மட்டும் தான்.

படப்பிடிப்பின் போது செருப்பு போடாமல் நடக்க சொல்லி இருந்தார்கள். அப்போது நான் அங்கு முள்ளு இருந்ததை கவனிக்காமல் நடந்து விட்டேன். அந்த முட்கள் காலில் நிறைய குத்திவிட்டது. நான் டிடி(TT) மருந்து போட்டிருந்தால் பிரச்சினையே எழுந்திருக்காது. நான் போடாததால் என் கால் முழுவதும் செயலிழந்து ரத்த ஓட்டம் போகாமல் முட்டி வழியும் கருப்பாகி விட்டு நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது. பின் பல பிரபலங்களிடம் உதவி கேட்டேன். அதற்கு பிறகு தான் என்னுடைய கால் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்தது. பின் என்னால் பழையபடி நடக்க முடியவில்லை. அதற்கு ஸ்கேன் எடுக்கச் சொல்லி இருக்கிறார்கள். என்கிட்ட அவ்வளவு தொகை இல்லை.

இதையும் பாருங்க : ஹீரோவாவதற்கு முன்பாகவே சூர்யா படத்தில் தோன்றியுள்ள கார்த்தி. வைரலாகும் புகைப்படம்.

-விளம்பரம்-

குழந்தைகளுக்கு பால் வாங்கி தரவே என்னிடம் காசு இல்லை. பட்டினியாக குழந்தைகள் இருக்கும் போது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்காக இல்லை என்றாலும் என்னுடைய குழந்தைகளுக்காக யாராவது உதவி செய்யுங்கள். இதெல்லாம் அஜித் சாருக்கு தெரிந்தால் கண்டிப்பாக உதவி பண்ணுவார். ஏகப்பட்ட முறை அவரிடம் உதவி கேட்பதற்காக முயற்சித்தேன். அவரை ஒருமுறையாவது பார்த்துவிட முடியுமா என பல முறை முயற்சித்தேன். அஜித் சார் பார்த்தால் என் குழந்தைகளுக்கு எதிர்காலம் கிடைக்கும் என்று கூறினார்.

Advertisement