நான் ரெடி சார் – இரண்டாம் பாகம் பற்றி கேட்ட செல்வராகவனுக்கு 10 ஆண்டு கழித்து பதில் அளித்த திரிஷா

0
1793
- Advertisement -

10 வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் பதிவிற்கு திரிஷா அளித்து இருக்கும் பதில் தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தமிழ் சினிமா உலகில் ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்த இவர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் மூலம் இயக்குனர் ஆனார். இவர் இயக்கிய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது. மேலும், இவர் இயக்குவதும் மட்டும் இல்லாமல் படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் பீஸ்ட். இந்த படத்தில் செல்வராகவன் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து செல்வராகவன் நடித்த சாணி காகிதம் படம் கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.

- Advertisement -

செல்வராகவன் திரைப்பயணம்:

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் செல்வராகவன் நடிப்பில் வெளியான படம் பகாசூரன். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. பின் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருகிறேன் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். அதோடு செல்வராகவன் இந்த படத்தை இயக்குவது மட்டும் இல்லாமல் நடித்தும் இருந்தார். இப்படி இவர் படங்களில் நடித்தும் இயக்குவதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே படம்:

இந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் ட்வீட்டுக்கு திரிஷா அளித்திருக்கும் பதில் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, 2007 ஆம் ஆண்டு தெலுங்கில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே’. இந்த படத்தில் வெங்கடேஷ், திரிஷா நடித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இந்த படத்தை தான் தமிழில் யாரடி நீ மோகினி என்ற பெயரில் தனுஷ், நயன்தாரா நடிப்பில் ரீமேக் ஆக வெளிவந்திருந்தது.

-விளம்பரம்-

செல்வராகவன் டீவ்ட்:

தமிழிலும் இந்த படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த படம் குறித்து தான் 2013 ஆம் ஆண்டு செல்வராகவன் ட்விட் ஒன்று போட்டிருந்தார். அதில் அவர், ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே படத்தை நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்த்தேன். வெங்கடேஷ், திரிஷா உடைய வேலை சிறப்பாக இருக்கிறது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயார் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த ட்வீட்க்கு பத்து ஆண்டுகளுக்கு பிறகு நடிகை திரிஷா, நான் ரெடி செல்வராகவன் என்று பதிலளித்திருக்கிறார.

திரிஷா பதில்:

தற்போது திரிஷாவின் இந்த பதில் தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் பல வருடங்கள் கழித்து செல்வராகவனுக்கு திரிஷா பதில் அளிப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் கூடிய விரைவில் ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே படத்தின் இரண்டாம் பாகம் தயாராகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது திரிஷா விஜய் நடிப்பில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து சில படங்களில் திரிஷா கமிட்டாகி இருக்கிறார்.

Advertisement