‘நான் அழக்கூடாது என்பதை புரிந்து கொண்டேன், ஏன் என்றால்’ – தன் கணவரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் சேதுராமன் மனைவியின் உருக்கமான பதிவு.

0
729
sethu
- Advertisement -

தன் கணவரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் சேதுராமனின் மனைவி உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகரும் மருத்துவருமான சேது ராமன்கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் சந்தானத்தின் மூலம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பின்னர் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் சேது ராமன். டாக்டர் சேதுராமன் அண்ணா பல்கலைக்கழகத்தில் சரும நிபுணர் எனப்படும் dermatology என்ற துறையில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு தோல் நோய் மருத்துவமனை ஒன்றை திறந்தார்.

இதையும் பாருங்க : தொடர்ந்து நடிகைகள் குறித்து ஆபாசமான பேச்சுக்கள் – பயில்வான் மீது போலீசில் புகார். யார் கொடுத்துள்ளது பாருங்க.

- Advertisement -

மருத்துவர் + நடிகர் :

இதில் சந்தானம் பாபிசிம்ஹா நிதின் சத்யா வெங்கட்பிரபு என்று பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.இதனைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி அண்ணா நகரில் தனது இரண்டாவது மருத்துவமனையையும் திறந்தார் சேதுராமன்.மருத்துவர் மற்றும் நடிகர் என்று இரண்டு துறையில் இருந்து வந்த டாக்டர் சேதுராமன் கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி உமா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மாரடைப்பால் மறைந்த சேதுராமன் :

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே போல இந்த நிலையில் டாக்டர் சேதுராமன் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்து விட்டார் என்ற ஒரு வதந்தியும் பரவியது. ஆனால், அவர் மாரடைப்பால் தான் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்து இருந்தனர்.

-விளம்பரம்-

சேதுவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் :

சேதுராமன் இறந்த போது அவரது மனைவி உமா கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் சேதுராமன் இறந்த 5 மாதத்தில் உமாவிற்கு ஆண் குழந்தை பிறந்தத. தன் கணவர் மீண்டும் வந்துவிட்டார் என்று மிகவும் உருக்கத்துடன் பதிவிட்டு இருந்தார். சேதுராமன் இறப்பிற்கு பின் தன் இரண்டு பிள்ளைகளை கவனித்து வருகிறார் உமா. இந்த நிலையில் இன்று சேதுராமனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் உமா தன் இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மனைவியின் உருக்கமான பதிவு :

அதில் ‘நான் அழுதால் கண்டிப்பாக இந்த உலகைவிட்டு திடீரென்று பிரிந்த அவரின் ஆத்மாவிற்கு மிகுந்த வலியை கொடுக்கும் என்பதை நான் புரிந்துகொண்டேன். நாம் ஒரு ஆத்மாவை தான் இழந்தோம். ஆனால், அவரின் ஆத்மா தான் சம்பாதித்து வைத்து இருந்த பலரை பிரிந்து சென்றுவிட்டது. அதனால், யாருடைய வலி அதிகம். ஒரு உயிரை இழந்த உங்கள் வாழ்க்கையா ? இல்லை அனைத்து உறவையும் இழந்த அவரின் வாழ்க்கையா’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement