லிப் லாக்னு சொன்னீங்க, ஹீரோ என்ன இப்படி செய்றார். இயக்குனரிடம் புலம்பிய நாயகி.

0
9376
heroshini
- Advertisement -

பொதுவாக ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படத்தில் தான் முத்த காட்சிகள் நிறைந்து இருக்கும் ஆனால் தற்போது தென்னிந்திய சினிமாக்களில் கூட முத்தக் காட்சிகளும் டூ பீஸ் காட்சிகளும் குறைவில்லாமல் இருந்து வருகிறது அதிலும் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களின் படத்தில்கூட லிப்லாக் காட்சிகள் சர்வசாதாரணமாக இடம் பெற்றுவிடுகிறது இந்த நிலையில் புதுமுக நடிகை ஒருவரை லிப்லாக் ஆட்சியின்போது எல்லைமீறி நடிகர் ஒருவர் கண்டமேனிக்கு முத்தம் கொடுத்துவிட்டார் என்று நடிகை புலம்பியது ஆக ஒரு செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது

-விளம்பரம்-
Image result for uttran tamil movie"
உற்றான் படத்தின் நாயகன் மற்றும் நாயகி

புதுமுக நடிகர்கள் ரோஷன் ஹீரோஷினி நடித்துவரும் திரைப்படம் உற்றான். கஜினி என்பவர் இப்படத்தை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் சில போஸ்டர்கள் கூட வெளியாகி இருந்தது. மேலும், இந்த படத்தில் வெய்யில் திரைப்படத்தில் பசுபதிக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா நீண்ட இடைவேளைக்கு பின்னர் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக ஹீரோஷினி என்பவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தின் லிப் லாக் காட்சியில் போது கதாநாயகன் ரோஷன் உதயகுமார் கதாநாயகி ஹீரோஷினிக்கு முத்தம் கொடுக்கும் காட்சியின்போது கட் என்று சொல்லி முடித்தவுடன் கதாநாயகி ஹீரோஷினி, இயக்குனரின் நோக்கி வேகமாக வந்து என்னிடம் கதை சொல்லும் போது லிப்லாக் காட்சி என்று மட்டும் தானே கூறினீர்கள் ஆனால், ஹீரோ இப்போது என்னை ஸ்மச் செய்கிறார் என்று புலம்பியுள்ளார். உடனே அந்த இயக்குனரும் ஸ்மூச் என்றால் என்ன என்று கதாநாயகியிடம் கேட்டதற்கு உதட்டை உறிஞ்சுவது என்று கோபமாக கூறியுள்ளார்.

உற்றான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.

-விளம்பரம்-

பின்னர் கதாநாயகியை சமாதானம் செய்த இயக்குனர் இம்முறை ஹீரோ சரியாக செய்வார் என்று கூறி மீண்டும் முத்தக் காட்சியை எடுக்க ஆரம்பித்து உள்ளார். ஆனால் ,அதன் பின்னரும் ஹீரோ ரோஷன் கதாநாயகியின் உதட்டில் கொஞ்சம் எல்லை மீறி முத்தம் கொடுத்து இருக்கிறார். இதனால் கோபம் அடைந்துள்ள கதாநாயகி ஹீரோஷினி எதுவும் சொல்லாமல் கேரவனுக்குள் சென்றுவிட்டாராம். அதன் பின்னர் இயக்குனர் எவ்வளவோ சமாதானம் செய்து மீண்டும் நடிக்க வைத்தாராம் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பதை கதாநாயகியான ரோஷினி கூறினால் மட்டுமே.

Advertisement