வாணி ராணி சீரியல் நடிகைக்கு கொரானா – அட பாவமே, இங்களுக்கா ?

0
4034
pooja
- Advertisement -

நாடு முழுவதும் கொரானாவின் தாக்கம் மின்னலைப் போல் பரவிக் கொண்டு வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது வாணி ராணி சீரியல் புகழ் நடிகை நவ்யா சுவாமிக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு மற்றும் தமிழ் தொலைக்காட்சி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நவ்யா சுவாமி. நவ்யா சுவாமி 1990 மார்ச் 17 ஆம் தேதி கர்நாடகாவின் மைசூரில் பிறந்தவர்.

இதையும் பாருங்க : நயன்தாராவை தொடர்ந்து ஜூலியை சாமியாக வழிபடும் வெறித்தனமான ரசிகர். இதோ அந்த புகைப்படம்.

- Advertisement -

இவர் கர்நாடகாவின் மைசூர் ரோட்டரி உயர்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்துள்ளார். பின் கர்நாடகாவிலேயே எம்.எம்.கே மற்றும் எஸ்.டி.எம் மகளிர் கல்லூரியில் பிபிஎம் படிப்பில் சேர்ந்தார். இவர் படிக்கும் போதே கன்னட டிவி சேனலுக்கான ஆடிஷனில் கலந்து கொண்டு தேர்வானார். பிறகு தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.

பிறகு இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ராதிகாவின் ‘வாணி ராணி’ சீரியல் மூலம் பிரபலமானவர். மேலும், நா பேரு மீனாட்சி மற்றும் அமே கதா ஆகிய தெலுங்கு சீரியல்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை நவ்யா சுவாமிக்கு கோவிட்-19 சோதனை செய்யப்பட்டது. பின் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதற்காக அவர் தற்போது தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement