போட்டியாளர்களை போல கமலிடமும் எதிர்த்து பேசிய வனிதா.! கடுப்பான ரசிகர்கள்.!

0
4488
Vanitha
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒட்டு மொத்த வெறுப்பையும் சம்பாதித்து வனிதா தான். இவர் நடந்து கொண்ட விதத்தை பார்த்து இவர் தான் இந்த வாரம் வெளியேற வேண்டும் என்று ரசிகர்கள் உறுதியாக இருந்து வந்தனர். அதற்கு ஏற்றார் போல இந்த வாரம் வனிதா வெளியேற்றபட்டதாக அதிகாரபூர்வ தகவலும் வெளியானது. இன்றைய நிகழ்ச்சியில் வனிதாவை கமல்ஹாசன் வறுத்தெடுத்து உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

-விளம்பரம்-

சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோவில் கூட கமல்ஹாசன், வனிதாவை நீங்கள் பேசும் போது மற்ற யார் மீதும் கவனம் போவிட கூடாது என்பது போல தான் எனக்கு தெரிகிறது. ஒரு புறம் மட்டுமே ஒலிக்கக் கூடாது, நாம் பேசும் அளவிற்கு கேட்கவும் வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர் இவர் தான்.! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.! 

- Advertisement -

இதிலிருந்தே இன்றைய நிகழ்ச்சியில் வனிதாவை, கமல் வெச்சி செய்ய போகிறார் என்று தெரிந்தது. ஆனால், ப்ரோமோவில் பார்த்தது வெறும் ட்ரைலர் மட்டும் தான் உண்மையில் வனிதா கமலிடமும் அதே தோரணையில் தான் பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது.

வனிதாவிடம் கமல் பேசிக்கொண்டிருக்கும் போது, வனிதா மற்ற போட்டியாளர்களிடம் பேசுவது போல ‘நீங்க கொஞ்சம் பேசாதீங்க, நான் பேசறதை கேளுங்க’ என்று கொஞ்சம் ஆணவமாக பேசியுள்ளாராம். இதற்கு பின்னர் கமலின் ரியாக்ஷன் என்னவாக இருந்தது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், இதனை நிகழ்ச்சியில் ஒளிபரப்புகிறார்களா இல்லையா என்பதும் ஒரு கேள்விக்குறி தான்.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்களை தான் வனிதா பேச விடாமல் தான் மட்டுமே பேசி எரிச்சலை ஏற்படுத்தி இருந்தார். ஆனால், கமலிடமும் வனிதா இப்படி நடந்து கொண்டுள்ள விதம் மேலும் வனிதா மீது எரிச்சலை அதிகரித்துள்ளது. தர்ஷன் கத்தியதற்கு ‘நேற்று பெய்த மழையில் பெய்த காலன்’ என்றார் வனிதா. தற்போது இந்த வசனம் கமலை இப்படி பேசியுள்ள வணிதாவிற்கு பொருந்தும் என்பதை அவர் புரிந்து கொண்டால் சரி.

Advertisement