‘அடுத்த தளபதி இவர் தான்’ ஹீரோவான காத்து கருப்பு கலை. கலாய்த்து தள்ளி வெங்கட் பிரபு போட்ட பதிவு.

0
159
- Advertisement -

காத்து கருப்பு கலை புதிதாக நடிக்க இருக்கும் படம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக சோசியல் மீடியாவின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என பலருமே சோசியல் மீடியா மூலம் பிரபலமாகி இருக்கிறார்கள். இதன் மூலம் பல பேர் சினிமாவிலும் வாய்ப்பு தேடிக் கொள்கிறார்கள். அந்த வகையில் சோசியல் மீடியா மூலம் பிரபலமானவர் காத்து கருப்பு கலை.

-விளம்பரம்-

முதலில் இவர் சின்ன சின்ன வீடியோக்களை தான் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்.
டிக் டாக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலியின் மூலம் இவர் பதிவிடும் வீடியோக்கள் எல்லாம் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. ஒரு கட்டத்தில் இவர் ஆபாசமாகவும், டபுள் மீனிங்க் பேசி வீடியோக்களை பதிவிட்டிருந்தார். இதற்கு இவருக்கு திருச்சி சாதனா தான் உறுதுணையாக இருந்தார். இருவரும் சேர்ந்து கொண்டு இரட்டை அர்த்தத்தில் பேசி நடனமாடும் வீடியோக்களை எல்லாம் பதிவிட்டிருந்தார்கள்.

- Advertisement -

காத்து கருப்பு கலை வீடியோ:

இது குறித்து பல விமர்சனங்கள் வந்தாலும் இதன் மூலம் காத்து கருப்பு கலை பிரபலம் ஆகிவிட்டார்.
அதற்கு பிறகு இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவரை பல சேனல்கள் பேட்டி எடுத்து வருகிறது. மேலும், இவர் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். மற்ற youtube சேனல்கள் நடத்தி வரும் நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்தும், பிரபலங்களை வைத்து பேட்டி எடுத்தும் வருகிறார்.

காத்து கருப்பு கலை நடிக்கும் படம்:

இந்த நிலையில் காத்து கருப்பு கலை நடிக்க இருக்கும் புது படம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. கதாநாயகியாக புதுமுக நடிகையை அறிமுகப்படுத்த இருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்புதான் இந்த படத்திற்கான பூஜை நடைபெற்றிருக்கிறது. இதில் பட குழுவை சேர்ந்த ஒருவர், காத்து கருப்பு தான் அடுத்த தளபதி என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

படம் குறித்த வீடியோ:

இதனை அடுத்து காத்து கருப்பு கலை படத்தில் வந்த ஒரு வசனத்தை பேசி இதனால் தான் இந்த படத்தில் நடிக்க நான் ஒத்துக் கொண்டேன் என்று வசனத்தை கூறியிருந்தார். இப்படி இவர் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் சர்ச்சையாகி வருகிறது. இதை பார்த்து பலருமே, என்னடா சினிமாவுக்கு வந்த காலக்கொடுமை என்றெல்லாம் விமர்சித்தும், காத்து கருப்பு கலையை திட்டியும் வருகிறார்கள்.

வெங்கட் பிரபு பதிவு:

இதை பார்த்த இயக்குனர் வெங்கட் பிரபு, காத்து கருப்பு பேசியிருக்கும் வீடியோவை பகிர்ந்து நமக்கு டாப் கொடுப்பாங்க போலயே அமுதன் சார் என்று தமிழ் பட இயக்குனர் அமுதனை Tag செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள சி எஸ் அமுதன் ‘நமது இடத்தை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்க கூடாது. உழைச்சிக்கிட்டே இருந்தா தான் இவங்க காலத்துல இருக்க முடியும்’ என்று என்று கிண்டல் அடிக்கும் வகையில் பதிவு போட்டு இருக்கிறார்.

Advertisement