தற்போது தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடி யார் என்றால் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் செய்யும் காதல் லூட்டிகளை பார்த்து பலரும் புகைந்து வருகின்றனர்.ஆனால் இவர்கள் இருவரும் காதலித்து வரும் நிலையில் இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை.
ஆனால் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நயன்தாரா.அப்போது மேடையில் பேசிய அவர் எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அம்மா,அப்பா, அண்ணன் அனைவர்க்கும் நன்றி என தெரிவித்தார் மேலும் எனது வெற்றிக்கு காரணமாக இருந்த எனது பையன்ஸி (அதாவது திருமணம் செய்துகொள்ளப்போகும் நபர் என்று அர்த்தம்) விக்னேஷ் சிவனுக்கு நன்றி என தெரிவித்தார். இதனால் இவைர்கள் திருமணம் செய்துகொள்ளவர்கள் என்று சிறு துடுப்பு மட்டும் கிடைத்தது.
இதற்கு பதிலுக்கு நயன்தாராவை புகழும் விதமாக சமீபத்தில் இசை நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற விக்னேஷ் சிவன் நயன்தாராவை இரும்பு பெண்மணி என்று புகழாரம் சுடியுள்ளார்.ஏற்கன்வே நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று புகழ்ந்து வரும் நிலையில் தற்போது அவருக்கு மேலும் ஒரு படத்தை கொடுத்துள்ளார் அவரது காதலர்.
மேலும் நயன்தாராவை பற்றி பேசிய விக்னேஷ் சிவன் நயன்தாரா எனக்கு கடவுள் கொடுத்த வரம் என்று என்றும் நயன்தாரா எனக்கு கிடைத்தது நான் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று உணர்த்துகிறது. நயன்தாராவை எனக்கு பிடிக்க காரணம் அவர் ஒரு இரும்பு பெண்மணி அதனால் தான் மற்ற நடிகைகளை காட்டிலும் நயன்தாரா என்னுடைய அபிமானமான நடிகை என்று கூறியுள்ளார்.