விஜய் மீது செருப்பெரிந்த விவகாரம், காவல் நிலையத்தில் புகார் – Editனு முட்டு கொடுத்தாங்களே.

0
521
Vijay
- Advertisement -

கேப்டன் இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்க வந்த விஜய் மீது செருப்பு வீசப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இறந்த கேப்டன் விஜயகாந்தின் இறப்பில் இருந்து இன்னமும் மக்கள் மீளவில்லை. கேப்டன் இறப்பிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் நேரில் சென்று இறுதி அஞ்சலியை செலுத்தினர். இறப்பிற்கு வர முடியாத பலர் சமூக வலைதளத்தில் தங்கள் இரங்கல் செய்தியை தெரிவித்து இருந்தனர்.

-விளம்பரம்-

ஆனால், வெளிநாட்டில் ஷூட்டிங் இருந்த விஜய் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவிக்காமல் இரவோடு இரவாக வந்து கேப்டன் இறப்பிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது கேப்டன் உடலை பார்த்தபடி அப்படியே கலங்கியபடி நின்றார் விஜய். இறுதியாக கிளம்பும் போது கூட கிளம்ப மனம் வராமல் தான் கிளம்பினார். ஆனால், விஜய் அங்கு இருந்த போது சிலர் வெளியே போ, வெளியே போ என்று கோஷமிட்டனர்.

- Advertisement -

கேப்டன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு காரில் ஏறி புறப்பட செல்லும் முன்னர் விஜய் மீது யாரோ ஒருவர் செருப்பை வீசி இருக்கிறார். பின்னர் விஜய் அருகில் இருந்தவர் அந்த செருப்பை எடுத்து மீண்டும் வீசினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அந்த மனுஷன் அப்படி என்னடா பண்ணாரு பாவம் என்று வேதனையுடன் பதிவிட்டு வந்தார்கள்.

மேலும், விஜய்யின் பெயரை கெடுக்கவே சிலர் இப்படி செய்கிறார்கள் என்றும் அப்படி ஒரு சம்பவம் அங்கு நடக்கவே இல்லை என்றும் விஜய் ரசிகர்கள் சிலர் சமூக வலைதளத்தில் தொடர்ந்து முட்டு கொடுத்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த சம்பவம் நடந்ததை உறுதி செய்யும் விதமாக சென்னை மாவட்ட தலைவர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது ‘ நான் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தென் மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வருகின்றேன் கடந்த 28 12 2023 அன்று நடிகர் திரு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறப்பிற்கு துக்கம் விசாரிப்பதற்காக இரவு சுமார் 10:30 மணி அளவில் தளபதி விஜய் அவர்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் திருமண மண்டபத்திற்கு வருகை தந்திருந்த தளபதி விஜய் அவர்களின் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காலனியை கழற்றி தளபதியை நோக்கி எரிந்துள்ளார்.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள் அவர்களின் சொந்தங்கள் மற்றும் அதன் மீது பாசத்தை வைத்துள்ள ஒட்டுமொத்த மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் அருவருக்குத்தக்க என் மாதிரியான செயலில் ஈடுபட்ட அந்த நபரை கண்டித்து அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் படியும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement