எப்படி இருந்தும் தல-தளபதி ரசிகர்கள் ஒரு பக்கம் எப்போதும் சண்டை போட்டுகொண்டு தான் இருக்கின்றனர். கடந்த பல வருடங்களாக பொது நிகழ்ச்சிகளுக்கு வருவதை தவிர்த்து வருகிறார் தல. அரசியல்வாதிகள் ஏற்படுத்திய சில கசப்பான அனுபவங்களால் ரசிகர் மன்றத்தை கலைத்தது மட்டுமில்லாமல், பேட்டிகள் கொடுப்பதையும் நிறுத்திவிட்டார் தல.
இதையும் படிக்கலாமே:
பிரகாஷ் ராஜும் அரசியலுக்கு வரப்போறாரா ? இங்க என்ன தான் நடக்குது ?
ஆனால், ஒரு காலத்தில் பொதுவாக அனைத்து டீவி சேனல்களுக்கும் கெத்தாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து பேட்டி கொடுத்தார். அந்த சமயத்தில் ஒரு டீவியில் கொடுத்த பேட்டியில் தனக்கு பிடித்த தளபதி படம் 'காதலுக்கு மரியாதை' தான் எனவும் கூறியுள்ளார். இந்த படம் வந்த காலத்தில்தான் அஜித்தும் வாலி போன்ற தரமான படங்களை கொடுத்து வந்தார். அப்போது தான் இருவரும் தமிழ் சினிமாவின் அடுத்த ஜெனரேசன் நடிகர்களாக உருவம் பெற்றனர் எனப்தும் குறிப்பிடடகக்கது.




