விஜய்யின் மைண்ட் வாய்ஸை மாணவியின் அப்பா கேட்ச் பண்ணிட்டார்- பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்

0
1834
- Advertisement -

விஜய்யின் மைண்ட் வாய்ஸை மாணவியின் அப்பா கேட்ச் பண்ணி விட்டார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வரும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியாவில் முழுவதும் விஜய் மாணவர்களுக்கு விருது வழங்கிய நிகழ்வு குறித்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக விஜய் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-

அதோடு 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றார்கள். இது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார். அதுமட்டும் இல்லாமல் விஜய் தன் ரசிகர்களை அடிக்கடி சந்தித்தும் வருகிறார். விஜயின் இந்த சந்திப்பு எல்லாம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அதோடு விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார்.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம்:

இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வழங்குகிறார். இந்த நிகழ்வு சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று இருக்கிறது.

மேடையில் விஜய் பேசியது:

மேலும், அரசியல் மேடை போல் தயாராகி இருக்கும் இந்த விழாவில் விஜய்யின் புகைப்படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் விஜய் அவர்கள் மாணவர்களின் எதிர்காலம் குறித்தும், கல்வி குறித்தும் பல விஷயங்களை பேசி இருக்கிறார். பின் மாணவர்களுக்கு நடிகர் விஜய் அவர்கள் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சில மாணவர்களின் கோரிக்கையும் மேடையிலேயே விஜய் நிறைவேற்றி இருக்கிறார். கிட்டத்தட்ட 10 மணி நேரத்திற்கு மேலாக இந்த விழா நடைபெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

விழாவில் மாணவர்கள் செய்தது:

விழாவில் விருது வாங்கிய மாணவர்கள் சிலர் மேடையில் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். மாணவிகள் விஜயை பார்த்ததுமே காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். ஆனால், விஜய் அவர்கள் உடனடியாக தூக்கி விட்டு சால்வையை அணிவித்து பரிசு கொடுத்திருக்கிறார். சில மாணவிகள் விஜய்யை பார்த்தவுடன் அண்ணா என்று ஓடிவந்து கட்டி அனைத்தும் அழுது இருக்கிறார்கள். பார்ப்பதற்கே ரொம்ப எமோஷனலாக இருந்தது. இந்த நிலையில் மேடையில் மாணவியின் அப்பா பேசியிருக்கும் பேச்சைக் கேட்டு நடிகர் விஜய் அதிர்ந்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கலாய்க்கும் நெட்டிசன்கள்:

அதாவது, மேடையில் விருது வாங்கிய பின்னர் மாணவியின் அப்பா, விஜய் சார் இந்த டாபிக்கை பேச வேண்டாம் என்று சொன்னாலும் இங்கே வந்திருக்கும் எல்லோரும் அண்டர் 18. நீங்க இதே போல கல்லூரியில் யுனிவர்சிட்டியில் டாப் மார்க் எடுத்த மாணவர்களை சந்தித்து விருது கொடுத்தால் நீங்கள் நினைத்தது நடக்கும் என்று கூறியிருந்தார். இதைக் கேட்டவுடன் விஜய் அதிர்ச்சியில் மூழ்கி விட்டார். இப்படி அந்த மாணவியின் அப்பா பேசியதற்கு காரணம் விஜய் அரசியலில் வருவதற்காக தான் இதை செய்கிறார் என்று மறைமுகமாக பேசி இருக்கிறார். இதை நெட்டிசன்கள், விஜயின் மைண்ட் வாய்ஸை அந்த மாணவனின் அப்பா கேட்ச் பண்ணி விட்டார் என்றெல்லாம் கலாய்த்து வருகின்றனர்கள்.

Advertisement