உடல்நலத்தில் சற்று பின்னடைவு தான், ஆனால் – நேற்று பேட்டி கொடுத்ததால் வந்த தலைவலி, கேப்டன் மகன் போட்ட பதிவு.

0
2018
- Advertisement -

கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பரவிய வதந்திக்கு அவருடைய மகன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் சினிமா உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-
vijayakanth

இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் துறைக்கு அறிமுகமானவர் விஜயகாந்த். அதனை தொடர்ந்து இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. மேலும், சினிமாவின் உச்சத்தில் இருக்கும் போது படத்தில் பிச்சை காரனாக நடித்த ஒரே நடிகரும், வேறு மொழிகளில் வாய்ப்பு கிடைத்த போதிலும் தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்த நடிகரும் இவர்தான் என்பது குறிப்பிடதக்கது.

- Advertisement -

விஜயகாந்த் திரைப்பயணம்:

கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். இவர் நடிப்பை தாண்டி மக்களுக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். மேலும், இவர் நடிகர் என்பதையும் தாண்டி நல்ல உள்ளம் கொண்டவர் என்றே சொல்லலாம். இவரை தேடி யார் வந்தாலும் சாப்பாடு போட்டு அன்போடு அனுசரிப்பார்.

விஜயகாந்த் உடல்நிலை:

தன்னால் முடிந்த உதவிகளையும் அவர்களுக்கு செய்வார். இவர் செய்த பல உதவிகள் வெளியே தெரியாமலே போயிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்கமே கடனில் மூழ்கியிருந்தபோது கலை நிகழ்ச்சிகளை நடத்தி நடிகர் சங்க கடனை அடைத்து பல உதவிகளை செய்திருக்கிறார். இப்படிப்பட்ட மனிதர் சில ஆண்டுகளாக உடல் நல குறைவின் காரணமாக அவஸ்தை பட்டு வருகிறார். இவருக்கு தொடர்ந்து சிகிச்சையும் கொடுக்கப்பட்டு தான் வருகிறது.

-விளம்பரம்-

விஜயகாந்த் குறித்த செய்தி:

மேலும், இவர் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கட்சியை அவருடைய மனைவி மற்றும் மகன்கள் தான் பார்த்து கொண்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் நேற்று பத்திரையாளர் சந்திப்பில் பேசிய விஜயபிரபாகரன்’ கேப்டன் விஜயகாந்தின் உடல்நலத்தில் சற்று பின்னடைவு தான், ஆனால் கேப்டன் விஜயகாந்த் 100 வருடம் நல்லா இருப்பார், அவர் பழையபடி பேசுவார், எழுந்து வருவார் அதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம். உங்களை மாதிரியே நாங்களும் நம்புகிறோம். இப்போது வரைக்கும் கேப்டன் நலமாக தான் இருக்கிறார்’ என்று கூறி இருந்தார்.

விஜய பிரபாகரன் பதிவு:

இதனால் பலருமே விஜயகாந்தின் உடல் நிலை பின்னடைவு என்ற தலைப்பில் பலர் செய்திகளை வெளியிட ஆரம்பித்தனர். இதனால் இது தொடர்பாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், கேப்டனுடைய உடல்நிலை நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம். வழக்கம் போல் ஊடகங்கள் தவறான தலைப்பில் தான் செய்திகளை கொண்டு வருகிறது. கட்சியினர், ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். வழக்கம்போல் ஆகஸ்ட் 25ஆம் தேதி கேப்டன் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாக கொண்டாடலாம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement