எத்தனையோ நடிகர்கள் தங்களது செல்வாக்கு தனது பெற்றோர்கள், சொந்தங்கள் திரை துறையில் இருந்தார்கள் என அதன் மூலமாக திரைக்கு வந்தோர் மத்தியில். சினிமா துறையில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக தன் பயணத்தை தொடங்கிய சீயான் விக்ரம் சேது, காசி, பிதாமகன், ஐ போன்ற படங்களில் தன் உடலை வருத்திக்கொண்டு நடித்ததற்காக தான் இப்பொழுது சினிமாவில் சியான் விக்ரம் அவர்கள் இந்த உயரத்தில் உள்ளார். சீயான் விக்ரம் என்றாலே நடிப்புக்காக எப்பேர்பட்ட வேடங்களையும் எதையும் துணிந்து செய்வார் என்று நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். எம்ஜிஆர், சிவாஜி, கணேசன், நம்பியார் இவர்களைத் தொடர்ந்து இன்றைய காலகட்டத்தில் நடிப்பிற்கு ஒரு உதாரணம் என்றால் அது சீயான் விக்ரம் என்று சொல்வது மிகையாகது.அந்த அளவிற்கு தன் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்.
சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த மகான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் “கோப்ரா”. இந்த கோப்ரா படத்தில் வித விதமான கெட்டப்புகளில் விக்ரம் வருகிறார் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. நடிகர் விக்ரம் அவர்கள் கோப்ரா படத்தில் 20 விதமான கெட்டப்புகளில் நடித்து இருக்கிறார் என்று கூறபடுகிறது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். மிகுந்த பொருட்செலவில் இந்த படம் உருவாகி வருகிறது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
இதையும் பாருங்க : நான் கடவுள் படத்தில் நடித்த சிறுவனா இது ? எப்படி ஆகிட்டார் பாருங்க. அவரின் தற்போதைய நிலை.
மனிரத்தினம் கனவ படம் பொன்னியின் செல்வன் :-
இதனை அடுத்து விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பொன்னியின் செல்வன். இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு உருவாகி இருக்கிறது. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் சாதித்து காட்டி இருக்கிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.
பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளீயிடு :-
இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்திருந்த பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. மேலும், டீசர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் விக்ரம் நடித்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் விக்ரம் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று மாலை இவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிழல்கள் ரவி சீயான் விக்ரம் குறித்து பேசியது :-
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரமின் பங்கு குறித்த நிழல்கள் ரவி சொன்ன விஷயம் பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அதாவது, இந்த படத்தில் விக்ரம் அவர்கள் ஆதித்த கரிகாலன் என்ற ரோலில் நடித்து இருக்கிறார். இந்த படத்திற்காக அதிகமான மெனகெடல்களை செய்திருக்கிறார் விக்ரம். அதாவது, படத்தின் சூட்டிங் போது அவர் ஒரு நாள் காலை 7.30 மணிக்கு குதிரை மீது ஏறி தொடர்ந்து டயலாக் பேசி இருக்கிறார். பின் அவர் கீழே இறங்கும் போது மாலை 5 மணி ஆகிவிட்டது. அந்த அளவிற்கு டெடிகேட்டர் ஆனவர். இது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். இப்படிப்பட்ட கலைஞர் டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க முடியாத சூழல் உருவானது ரசிகர்கள் மத்தியில் வேதனையை உருவாக்கி இருக்கிறது.
இன்று டூவீட்டர் கணக்கு துவங்கிய சீயான் விக்ரம் :-
திரை பிரபலங்கள் என்றாலே எப்பொழுதும் சோசியல் மீடியாவில் தங்களது புகைப்படங்களை பதிவிட்டும், அடுத்து செய்ய போகும் படங்களை பற்றிய தகவல்களை பதிவிட்டும், ஒருவர் இன்னொருவர் மீது குறை கூறிக்கொண்டு இருப்பவர்களுக்கு மத்தியில் டூவீட்டர் ஆரம்பித்து 15 வருடங்கள் ஆகி நேற்று வரை டூவீட்டர் அக்கவுண்ட் இல்லாத பிரபலங்களில் சீயான் விக்ரமும் ஒருவர். இந்நிலையில் சீயான் விக்ரம் டூவீட்டரில் தனக்கு கணக்கு ஒன்றை தொடங்கியும், வெரிபையிடு டிக்கு வாங்கி தனது கணக்கில் இன்று ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஹாய் நான் தான் சீயான் விக்ரம் என்னடா மாறுவேஷத்துல வந்து இருக்கேன் பாக்காதீங்க பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்திற்காக இந்த கெட்டப் ரெடி பண்ணிட்டு இருக்கேன். டூவீட்டர் மூலமாக ரசிகர்களுடன் கனெக்டிவா இருக்கலாம் என்று சொன்னார்கள் அதனால் இந்த கணக்கை துவங்கியுள்ளேன். கொஞ்சம் தாமதம் தான் 15 வருடம் டூவீட்டர் தொடங்கி ஆகியுள்ளது. சரி நம்மளும் கொஞ்சம் ரசிகர்களின் அன்பை அனுபவிக்கலாம் என்று வந்துள்ளேன் இன்று அந்த வீடியோவில் பதிவிட்டிருந்தார்.