தனது பிறந்தநாளையொட்டி ஆஸ்ரங்களுக்கு சென்று அங்கு இருத்த முதியோர்களுக்கு உணவு அளித்த பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களை சந்தித்த அவர் ரஜினி காந்தின் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்தும் விஜயின் அரசியல் குறித்தும் அரசியலில் அவருடன் பயணிப்பது மற்றும் விஜயின் மகன் இயக்குனரகுவது பற்றியும் அவர் பேசினார்.
சூப்பர் ஸ்டார் பட்டம் கூறித்து
அவருக்கு அந்த பட்டம் வழங்கப்பட்டது சாதாரணமானது கிடையாது. அவருக்கு அந்த பட்டம் வழங்கபட்டு 45 வருடங்களுக்கு ஆகிறது. என்றைக்கும் இந்த வயதிலும் நிரூபிக்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் கிடையாது. அவரைப் பார்த்தால் ஒரு உற்சாகம் வரும் அவர் அனைவருக்கும் முன்மாதிரி. அவர் இந்த வயதில் ஓய்வு எடுக்கலாம் ஆனால் அவர் மக்களை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தேசிய விருதுகளைப் பற்றி பேசிய அவர் எனக்கு விருதுகளில் நம்பிக்கை இல்லை. நான்கு பேரு பார்த்து அதற்கு அவார்ட் வழங்குவது எனக்கு உடன்பாடு இல்லை.
விஜய்யை பற்றி பேசிய அவர்:
அரசியல் என்பது இங்கு நீங்களும் அரசியல்வாதி நானும் அரசியல்வாதி தான். ஏன் என்றால் அரசியல் என்பது ஒரு துறை கிடையாது. அது ஒரு தொழில் கிடையாது. அரசியல் ஒரு சமூக சேவை. அதாவது ஒரு மக்களுக்கு சார்ந்த ஒரு பிரதிநிதியை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசியல்வாதி மக்களுக்கு என்ன தேவையோ அவங்களுக்கு கொண்டு போய் சேர்க்கவேண்டும். நானும் நீங்களும் ஒரு ஐம்பது ரூபாய் கொடுத்து ஒருவருக்கு சாப்பாட்டுக்கு வழி இல்லாம கொடுத்து இருப்பீங்க இப்ப நீங்களும் சமூக சேவை பண்றதுனால நீங்களும் அரசியல்வாதி தான்.
அது போன்ற சேவைகளை செய்பவர்கள் அத்தனை பேரும் அரசியல்வாதி தான். விஜய்யை பொருத்தவரைக்கும் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு நடிகர் நான் வந்து கிட்டத்தட்ட அவர் பயணத்தை நான் லயோலோ காலேஜ்ல இருந்து நான் பார்த்து கொண்டு இருக்கிறேன். நிறைய பேர் தென் இந்தியாவில் நிறைய விஜய் இருக்கிறார்கள் என்று கூறுவார்கள். ஆனால் எனக்கு தெரிஞ்ச ஒரே விஜய் இளையதளபதி விஜய் தான் என்று பெருமையா நான் சொல்லிப்பேன் அவர் அரசியலுக்கு அந்த பின் அவருடன் இணைவது குறித்து முடிவெடுக்கலாம். நான் விஜயின் ரசிகன் என்று கூறினார்.
விஜயின் மகன் கூறித்து பேசிய அவர்
ஜோசன் சஞ்சய்க்கு வாழ்த்துக்கள்.எனக்கும் நீண்ட நாட்களாக இயக்குனராக வேண்டும் என்று ஆசை. அந்த வகையில் ஜோசன் சஞ்சய் இயக்குனராகவது எனக்கு உத்வேகத்தை அளிக்கிறது.