தளபதியை தொடர்ந்து களத்தில் இறங்கிய புரட்சி தளபதி

0
1348
- Advertisement -

விஜய்யை தொடர்ந்து விஷால் நடத்த இருக்கும் விழா குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-

இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இந்த வெற்றி அரசியல் வட்டாரத்தை கதிகலங்க வைத்தது. இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை.. மேலும், விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம்:

அந்த வகையில் இவர் சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சில மாணவர்கள் வைத்த கோரிக்கைகளை விஜய் அவற்றை மேடையிலேயே நிறைவேற்றி இருக்கிறார். கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேலாக இந்த விழா நடைபெற்றிருக்கிறது.

விஜய் நடத்திய விழா:

இந்த விழாவில் விஜய் அவர்கள் மாணவர்களின் எதிர்காலம், கல்வி, அரசியல், தலைவர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசி இருக்கிறார். மாணவர்களுக்கு விஜய் பரிசு வழங்கியது குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள். இந்த நிலையில் விஜய் போல நடிகர் விஷால் விழா ஒன்றை நடத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகர் விஷால் அவர்கள் கடந்த சில வருடங்களாகவே தேவி அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார்.

-விளம்பரம்-

விஷால் நடத்தும் விழா:

அதன் மூலம் இவர் பிளஸ் 2 வகுப்பு படித்து முடித்த ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு மேற்படிப்புக்கு உதவி செய்து வருகிறார். கிட்டத்தட்ட 300 பேர் இந்த அறக்கட்டளையின் மூலம் கல்லூரியில் படித்து வருகின்றனர். விஜய்க்கு முன்பே இந்த நற்செயலை விஷால் செய்து வருகிறார். இது பலருக்கும் தெரியாத ஒன்றுதான். இந்த நிலையில் விஜய் நடத்திய விழாவை போல தேவி அறக்கட்டளை மூலம் உதவி பெறும் மாணவ மாணவர்களுடன் பெற்றோர்களையும் அழைத்து விழா நடத்த திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.

விஷாலின் அரசியல் நோக்கம்:

தற்போது அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகிருக்கின்றது. இந்த தகவலின் மூலம் விஷாலும் அரசியலில் களமிறங்க தான் இதெல்லாம் செய்து வருகிறார்கள் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். இவர் நடிப்பில் பல சூப்பர் ஹிட் படங்கள் வெளிவந்து இருக்கிறது.

Advertisement