சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவருக்கு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி திருமணம் நடைபெற்றது. அரசியல் பிரமுகரின் குடும்பத்தை சேர்ந்த தொழிலதிபருமான விசாகனை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் சௌந்தர்யா.
சென்னையில் வெகு விமர்சியாக நடைபெற்றது இந்த திருமணம். இந்த திருமணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி, தி மு க தலைவர் ஸ்டாலின், திருமாவளவன், வைகா போன்ற அரசியல் பிரமுகர்களும், பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
அதே போல இந்த திருமணத்தின் போது சௌந்தர்யாவின் மகனிடம் விசாகன் கொஞ்சி விளையாடும் புகைப்படம் வலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில் விசாகன் மற்றும் தனது மகனுக்குண்டான உறவை பற்றி நெகிழ்ந்துள்ளார் ஐஸ்வர்யா.
தனது மகன் வேத்வை விசாகனுக்கு மிகவும் பிடித்து போய்விட்டதால், இருவருமே நன்றாக பழக ஆரம்பித்தனர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்த திருமணத்திற்காக வேத்துவிடம் கூட, விசாகன் நான் அம்மாவை திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டாராம், அதற்கு அவர் ஆம் என்று கூறியதாகவும், அந்த வீடியோ கூட இருப்பதாக செளந்தர்யா கூறியுள்ளார். அதுமட்டுமின்றி திருமண நேரத்தில் வேத் அப்போது இல்லை, உடனே விசாகன் வேத் வரும் வரை காத்திருக்கலாம் என்று தாலி கட்டாமல் விசாகன் காத்திருந்ததாகவும்