தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் எம்.பி.ஏ முடித்து உள்ளார். பின் இவர் TNCA லீக் ஆட்டங்களில் விளையாடி ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தார். அப்போது விஷ்ணுவின் ஒரு காலில் காயம் ஏற்ப்பட்டு அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து போனது. அதற்கு பின் தான் இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து துரோகி, குள்ளநரிக்கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்,கதாநாயகன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான “ராட்சசன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். விஷ்ணு விஷால் அவர்கள் ரெஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செய்தார்.
இதையும் பாருங்க : இந்த பாட்ல காஜல் முத்தம் கொடுக்கும் முன், முத்தம் கொடுத்த பின்- இந்த தவற நோட் செஞ்சீங்களா ?
இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஆண்டு இவர்கள் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் சோசியல் மீடியாவில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் வேற யாரும் இல்லைங்க. நடிகர் விஷ்ணு விஷால் உடைய அப்பா. போலீஸ் உடையுடன் இருக்கும் தன் தந்தையின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் விஷ்ணு. விஷாலின் தந்தை பெயர் ரமேஷ் குடவ்லா. இவர் தமிழ்நாடு போலீஸ் ADGP ஆவார். தற்போது இந்த புகைப்படத்தை விஷ்ணு விஷால் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் விஷ்ணு விஷாலின் தந்தை போலீசா!! என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
இதையும் பாருங்க : நிதி கொடுத்த விஜய், கிண்டலடிக்கும் விதமாக ட்வீட் செய்துவிட்டு பின்னர் அதை நீக்கிய கருணாகரன்.
தற்போது நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் பிரபு சாலமன் இயக்கத்தில் காடன், எழில் இயக்கத்தில் ஜகஜால கில்லாடி, மனு ஆனந்தின் FIR, முரளி கார்த்திக் இயக்கத்தில் மோகன் தாஸ், செந்தில் வீராசாமி இயக்கத்தில் பொன் ஒன்று கண்டேன், எஸ்.பி. கார்த்திக் இயக்கத்தில் இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகம்,
ஷங்கர் தயாள் இயக்கத்தில் வீர தீர சூரன், கண்ணன் இயக்கத்தில் போடா ஆண்டவனே என் பக்கம் என பல படங்கள் தன் கைவசம் வைத்து உள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.