சிவகார்த்திகேயன் எப்படிபட்ட நபர் – இமான் சர்ச்சை குறித்து தொகுப்பாளர் தீபக்கின் நச் பதில். வைரலாகும் வீடியோ இதோ.

0
575
Deepak
- Advertisement -

சிவகார்த்திகேயன்- இமான் சர்ச்சை குறித்து நடிகர் தீபக் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் சிவகார்த்திகேயன்-இமான் சர்ச்சை அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இசை அமைப்பாளராக திகழ்பவர் டி.இமான். இவர் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வெளியாகி இருக்கிறது. இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் டி இமான் அவர்கள் சிவகார்த்திகேயன் குறித்து கூறியிருந்தது, மனம் கொத்தி பறவை, ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, எங்கள் வீட்டுப்பிள்ளை போன்ற பல படங்களுக்கு நான் இசையமைத்து இருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் அவர் முதன்முறையாக என்னுடைய இசையில் தான் பாடினார். ஆனால், இனி அவருடன் நான் பயணிக்க போவதில்லை. இந்த ஜென்மத்தில் இனி சேர்ந்து நாங்கள் பயணம் செய்வது ரொம்ப கஷ்டமான விஷயம்.

- Advertisement -

சிவகார்த்திகேயன்-இமான் சர்ச்சை :

காரணம், எனக்கு சிவகார்த்திகேயன் மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார். அதை என்னால் வெளியில் சொல்ல முடியாது. இதை குறித்து நான் அவரிடமும் நேரடியாகவே கேட்டு விட்டேன். அதற்கு அவர் சொன்ன பதிலை இந்த இடத்தில் என்னால் சொல்ல முடியாது. பல விஷயங்களை மூடி மறைத்து தான் ஆக வேண்டும். அந்த வலியும் வேதனையும் எனக்கு அதிகமாகவே இருந்தது என்று கூறி இருந்தார். இப்படி டி.இமான் வெளிப்படையாக பேசி இருந்தது குறித்து பலரும் பல விதமான கருத்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

மோனிகா அளித்த பேட்டி:

அதோடு இமான் தன் முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ததற்கு காரணம் சிவகார்த்திகேயன் என்றும் கூறி வருகிறார்கள். பின் இது குறித்து இமான் முதல் மனைவி மோனிகா ரிச்சர்ட், சிவகார்த்திகேயன் எங்களுடைய குடும்ப நண்பர் தான். ரொம்ப டீசன்டான மனிதர். இமானுக்கும் அவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. அவர் எங்களுக்குள்ள விவாகரத்து நடக்கக்கூடாது என்று சமாதானம் பேசி பஞ்சாயத்து எல்லாம் பண்ணி வைத்திருந்தார். ஒரு குடும்பம் சிதறிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்திலும், நாங்கள் ஒற்றுமையாக வாழனும் என்று நினைத்து தான் சமாதானம் செய்ய சிவா முயற்சிகளை எடுத்தார். அது இமானுக்கு பிடிக்கவில்லை.

-விளம்பரம்-

நெட்டிசன்கள் கருத்து:

சிவகார்த்திகேயன் தனக்கு சப்போர்ட் பண்ணவில்லை என்று தான் இமான் துரோகம் செய்தாரு என்று சொன்னது எனக்கு புரியுது. ஆனால், அதை வெளியில் வேற மாதிரி புரிஞ்சுகிறார்கள் என்று கூறி இருந்தார். இதனை அடுத்து இமானின் முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ததற்கு காரணம் சிவகார்த்திகேயன் என்றும் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு சிவகார்த்திகேயன் தான் என்றும் கூறி இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக பிரபலங்கள் பலரும் பேட்டி அளித்து வருகிறார்கள். அதில் சிலர் இமானுக்கு ஆதரவாகவும் சிலர் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்கள்.

தீபக் பேட்டி:

இந்த நிலையில் இது தொடர்பாக நடிகர் தீபக் பேட்டியில், இப்போது எல்லாம் சோசியல் மீடியாவில் ஒரு விஷயம் வந்தால் பயங்கரமாக வைரல் ஆகி வருகிறது. அது உண்மையா? பொய்யா? என்று ஆராயாமல் பலரும் பல்வேறு விதமான கமெண்ட்களை போட்டு வருகிறார்கள். தயவுசெய்து ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்தால் பகிருங்கள். இல்லை என்றால் அதை விட்டு விடுங்கள். தேவையில்லாமல் ஒருவருடைய மனதை புண்படுத்த வேண்டாம். உண்மை எது என்று தெரியாமல் தங்களுக்கு தோன்றியதை எல்லாம் பதிவிடாதீர்கள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement