சர்ச்சையை ஏற்படுத்திய ராஷ்மிகாவின் DeepFake வீடியோ – வீடியோவில் தோன்றும் நிஜ பெண் கொடுத்த விளக்கம்

0
469
- Advertisement -

ராஷ்மிகாவின் முகத்தை மாஃபிங் செய்த வீடியோவிற்கு சொந்தமான நிஜ பெண் கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. சமீப காலமாகவே தொழில்நுட்பம் வளர்வதன் மூலம் நிறைய விளைவுகளும் ஏற்படுகிறது. அந்த வகையில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பல பேருடைய வாழ்க்கையும் சீரழித்து வருகிறார்கள். இதில் அதிகம் பெண்கள் தான் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பெண்களின் புகைப்படத்தை மாபிங்க் செய்து அதை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இந்த நிலையில் சமீபத்தில் அரைகுறை ஆடையுடன் லிப்டில் ராஸ்மிகா நுழைவது போன்று ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து பலருமே பலவிதமான கமெண்ட்களை போட்டிருந்தார்கள். ஆனால், உண்மையில் அந்த வீடியோவில் இருந்தது ராஷ்மிகா கிடையாது. அது செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா மாற்றப்பட்டு இருப்பது என்று தெரிய வந்திருக்கிறது. இது குறித்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாபச்சன் கண்டித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார்.

- Advertisement -

ராஷ்மிகா மந்தனா டீவ்ட்:

அதனை தொடர்ந்து மிருணால் தாக்கூர்,, நாக சைதன்யா, சின்மயி போன்ற பிரபலங்கள் ராஷ்மிகாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்கிறார்கள். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ராஷ்மிகா மந்தனா டீவ்ட் போட்டு இருக்கிறார். அதில் அவர், சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் செயற்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட deepfake வீடியோவை பற்றி பேசுவதற்கு வருத்தமாக இருக்கிறது. உண்மையாக இப்படியான ஒன்று எனக்கு மிகவும் பயத்தை உருவாக்கி இருக்கிறது.

செயற்கை தொழில்நுட்பம் குறித்து சொன்னது:

நான் மட்டுமல்ல இன்றைய உலகில் இந்த தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதால் பலரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இன்று நான் ஒரு பெண்ணாகவும், ஒரு நடிகையாகவும் என்னுடைய குடும்பம், நண்பர்கள், என்னை பாதுகாப்பவர்கள் உள்ள்ட்டோருக்கு நன்றியுடன் இருக்கிறேன். ஆனால், இந்த மாதிரியான ஒன்று என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் நடந்து இருந்தால் அதனை எப்படி சமாளித்திருப்பேன் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இதனால் இதன் மூலம் பலர் பாதிக்கப்படுவதற்கு முன்னதாக இது குறித்து தெரியப்படுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

விடியோவிற்கு சொந்தமானவர்:

இந்த நிலையில் லிஃப்ட்டில் லிப்டில் அரைகுறை ஆடையுடன் நுழைந்த பெண்ணின் பெயர் ஜாரா படேல். இவர் பிரிட்டிஷ் இந்திய சமூக ஊடக ஊடகத்தில் பிரபலமானவர். மேலும், இது தொடர்பாக ஜாரா படேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், ராஷ்மிகா தொடர்பான சர்ச்சையில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. நடந்தது என்னை ஆழமாக வருத்தமடையச் செய்துள்ளது என்று கூறி இருக்கிறார். அதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஜாரா படேல், அனைவருக்கும் வணக்கம். யாரோ ஒருவர் எனது உடலையும் பிரபல பாலிவுட் நடிகையின் முகத்தையும் பயன்படுத்தி ஒரு டீப் ஃபேக் வீடியோவை உருவாக்கியது எனது கவனத்திற்கு வந்துள்ளது.

ஜாரா படேல் பதிவு:

அந்த டீப்ஃபேக் வீடியோவுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. மேலும், என்ன நடக்கிறது என்பதைக் கண்டு நான் மிகவும் கலக்கமடைந்து வருத்தமடைந்தேன். சமூக ஊடகங்களில் தங்களைத் தாங்களே சேர்த்துக்கொள்வதைப் பற்றி இப்போது அதிகம் பயப்பட வேண்டிய பெண்கள் மற்றும் சிறுமிகளின் எதிர்காலத்தைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். தயவுசெய்து ஒரு படி பின்வாங்கி, இணையத்தில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்பதை சரிபார்க்கவும். இணையத்தில் உள்ள அனைத்தும் உண்மையானவை அல்ல. என்ன நடக்கிறது என்பதற்கு நான் மிகவும் வருத்தப்படுகிறேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement