ஜீ தமிழ் அறிவித்த வீட்டு மனை என்னாச்சி.? ரமணியம்மாள் உருக்கமான பேட்டி.!

0
2673
Ramanayammal
- Advertisement -

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘ச ரி க ம பா’ என்ற பாடல் நிகழ்ச்சி மூலம் அனைவரையும் கவர்ந்தவர் ராக்ஸ்டார் ரமணியம்மா பாட்டி. இந்த நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலம் மூலம் இவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பும் கிடைத்திருந்தது.

-விளம்பரம்-
Ramaniyammal-

இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த போது சன், விஜய் போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போல இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ரமணியம்மா பெரும் ஆச்சர்யமான போட்டியாளராக களமிறக்கப்பட்றார். இவரது பாடலை கேட்டு நிகழ்ச்சி நடுவர்கள் கூட வியப்படைந்தனர்.

இதையும் பாருங்க : லாஸ்லியாவிடம் நூல் விட்ட கவின்.! நேற்றைய நிகழ்ச்சியில் நீக்கப்பட்ட 2 நிமிட வீடியோ இதோ.! 

- Advertisement -

சரிகமப நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் வர்ஷா முதல் இடத்தை பிடித்து வின்னர் பட்டத்தை வென்றார். ஆனாலும், ரமணியம்மாளுக்கும் அதிகப்படியான பொதுமக்கள் ஓட்டு போட்டனர். இவருக்குப் பரிசாக ஐந்து லட்சம் ரூபாயும், ஐந்து சென்ட் நிலமும் வழங்கப்படும் என நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. மேலும், அது சில மாதங்களிலேயே அவருக்கு வழங்பட்டது.

This image has an empty alt attribute; its file name is ramaniyammal.jpg

-விளம்பரம்-

ஆனால், இவருக்கு வழங்கபடுவதாக இருந்த 5 சென்ட் நிலம் நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் ஆன நிலையிலும் இவருக்கு வழங்கப்படாமல் இருந்தது. அதன் பின்னர் இந்த விஷயம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவ பின்னர் ரமணியம்மாளுக்கு ஒரு வழியாக இந்த நிலம் வழங்கப்பட இருக்கிறது.

இதுகுறித்து பேசியுள்ள ரமணியம்மாள், எனக்கு கிடைத்த பணத்தை நான் என் 7 பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுத்துவிட்டேன். நான் சம்பாதிக்கும் பணமே எனக்கு போதும். கடந்த மாதம் 13 ஆம் தேதி காரில் என்னை திண்டிவனம் அழைத்து சென்று என் பெயரில் பதர்ப்பதிவை முடித்துள்ளனர் என்று கூறியுள்ளார் ரமணியம்மாள்.

Advertisement