தமிழ் சினிமாவில் ஒரு பெரிய நடிகரின் ரசிகர் பட்டாளம் பெரும்பாலும் அவரது படங்களின் வசூல் நிலவரத்தை வைத்தே அறியப்படுகிறது. மேலும், இந்த வசூல் நிலவரங்களை வைத்து தான் பல நடிகர்களின் ரசிகர்கள் தன்னுடைய ஹீரோ தான் தற்போது மாஸ், கெத்து, சூப்பர் என சமூக வலை தளங்களில் பேசி வருகின்றனர்.
15 வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமா கிட்டத்தட்ட ஒரு படத்தில் ₹.50 கோடி வசூலை பார்ப்பதே அரிதாக இருந்தது. ஆனால், தற்போது பெரிய பட்ஜெட் படங்கள் பெரிய நடிகர்களை வைத்து எடுக்கும் போது படம் நன்றாக இருக்கும் பட்சத்தில் படம் வெளியான சில நாட்களிலேயே அசால்டாக ₹.100 கோடி வசூல் செய்துவிடுகிறது.
இதையும் படிங்க: தல அஜித் மீது உள்ள விஸ்வாசத்தை சில மணி நேரத்தில் காட்டிய ரசிகை- புகைப்படம் உள்ளே ?
இவற்றை எல்லாம் அறிய ரசிகர்களும் ஆவளாக தான் உள்ளனர். இதனால் படத்தின் தயாரிப்பாளர் அல்லது இயக்குனர் பட வசூல் நிலவரத்தை அவ்வப்போது வெளியிட்டு சூடேற்றுகின்றனர்.சமீபத்தில் தமிழிழ் வெளியான படங்களில் மெர்சல், அறம் மற்றும் தீரன் அதிகாரம் ஒண்று ஆகிய படங்கள் தான் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் தீரன் மற்றும் அறம் சுமாரான வசூல் செய்திருந்தாலும் மெர்சல் படம் தற்போது வரை ₹.250 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
தற்போது வரை தமிழ் சினிமாவில் 250 கோடி வசூல் செய்த படங்கள் :
1.எந்திரன்
2.பாகுபலி
3.கபாலி
4.பாகுபலி-2
5.மெர்சல்