தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடலாசிரியராக திகழ்பவர் சினேகன். இவர் பாடலாசிரியர் மட்டுமில்லாமல் கவிஞர், எழுத்தாளர், நடிகர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். மேலும், பல படங்களில் வெளிவந்த சூப்பர் ஹிட் பாடல்களை இவர் எழுதி இருக்கிறார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். மேலும், இந்த முதல் சீசனில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்தார். பின் சினேகன்- கன்னிகா ஆகியோருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி திருமணம் நடைபெற்று இருந்தது.
வீடியோவில் 15 நிமிடத்தில் பார்க்கவும்
சினேகன் – கன்னிகா :
இவர்கள் திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு படு விமர்சியாக நடைபெற்றது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த திருமணத்தை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் தலைமையில் நடத்தி வைக்கப்பட்டது. நடிகை கன்னிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு தொடரில் நடித்துள்ளார். பின் இவர் தேவராட்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். அதே போல 8 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ ஆர் ரஹ்மான் குறித்து சினேகன் :
இந்நிலையில் சமீபத்தில் சினேகன் அவர்கள் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது, எனக்கு ஏ.ஆர்.ரகுமான் சாருடன் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்று ரொம்ப வருடமாக ஆசை. அதாவது 15 வருடமாக நான் காத்துக்கொண்டிருந்தேன். அந்த வாய்ப்பு தற்போது தான் கிடைத்தது. நான் அவருடன் சேர்ந்து பணியாற்றி இருக்கிறேன். அதை அவர்களே அறிவிப்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். மேலும், 15 வருடமாக காத்துக்கொண்டிருந்த என்னுடைய எதிர்பார்ப்பு 15 நிமிடத்திலேயே முடிந்துவிட்டது. அவர் துபாயில் இருந்தார்.
ஏமாற்றிய நண்பர்கள் :
அதனால் இங்கிருந்தே ஜூம் மீட்டிங்கில் நாங்கள் பேசினோம். அப்போது அவர் இரண்டு வரிகளை சொல்லுங்கள் என்று கேட்டார். பின் அதற்கேற்ற மாதிரி மெட்டு போட்டார். அவர் அப்படியே 15 நிமிடத்திலேயே பாட்டு முடிந்துவிட்டார். இவ்வளவுதானா முடிஞ்சிடுச்சா? என்று நான் நினைத்தேன். அந்த தருணங்களை மறக்க முடியாது. அதே போல் நான் என் வாழ்க்கையில் அடிபட்டேன் என்பதை விட இன்னும் அடிபட்டுக் கொண்டு தான் இருக்கிறேன். என் நண்பர்களும், என்னை சுற்றி இருப்பவர்களாலும் நான் நிறைய ஏமார்ந்து இருக்கிறேன்.
பறிபோன வீடு கார் :
ஒவ்வொரு காலகட்டத்திலும் நண்பர்களால் நான் ஏமாற்றப்பட்டு இருக்கிறேன். தொழிலில் எல்லாம் நான் ஓடிப் பிடித்து சாதித்து விடுவேன். சாவுற வரைக்கும் என்னுடைய தொழிலை விட மாட்டேன். ஆனால், நட்பால் நான் நிறைய துரோகம் சந்தித்து இருக்கிறேன். பிக் பாஸ் வீட்டில் இருந்து நான் வெளியே வந்த பிறகு என்னுடைய ரெண்டு வீடு, கார் என எதுவும் இல்லை. என் நண்பன் செய்த துரோகத்தால் எல்லாமே இழந்தேன். 13 நாள் நான் வீட்டுக்குள் போக முடியாத அளவுக்கு ஹோட்டலில் தங்கி இருந்தேன். ஆனால், அவர்கள் மீது நான் எந்த ஒரு சட்ட ரீதியாக புகார் எடுக்கவில்லை. மறுபடியும் நான் அதே மாதிரி புது கார், வாங்கி அதே வீட்டுக்குள் போனேன்.
வரமாய் கிடைத்த மனைவி :
துரோகம் செய்தவர்கள் முகமும் தெரியவில்லை முகவரியும் தெரியவில்லை. அவர்கள் இப்போது பயந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இது தான் நான் அவர்களுக்கு கொடுக்கும் தண்டனை. அதேமாதிரி என்னுடைய மனைவியை மாற்றி வெளியே கொண்டு போகிற மாதிரி திட்டங்கள் நடந்தது. ஆனால், அவள் எனக்கு என் மாமாவை பற்றி தெரியும் என்று சொன்னாள். யாரையுமே நம்பாதே யாரும் உன் அளவுக்கு நல்லவர்கள் கிடையாது. இந்த உலகம் என்ன பேசினாலும் உன்னைப்பற்றி எனக்கு தெரியும். நீ யாரையும் நம்பாதே என்று சொல்லுவாள். நீ யாருக்கு எந்த மெசேஜ் அனுப்பினாலும் கவலையில்லை. ஆனால், கோபமாக அனுப்புகிற மெசேஜ் மட்டும் எனக்கு காண்பித்து விட்டு அனுப்பு என்று சொல்லுவாள். அதனால் நான் கோபத்தில் மெசேஜ் பண்ணாலும் முதலில் அவளிடம் காண்பித்து விட்டு அவர் பார்த்த பிறகு தான் மற்றவர்களுக்கு அனுப்பி விடுவேன் என்று கூறியிருக்கிறார்.