சமீபக காலமாக நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் அதிகமாகி கொண்டிருக்கிறது. தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை அவர்கள் தற்போதெல்லாம் வெளிப்படையாக கூறிவருகின்றனர். இந்நிலையில் சின்ன திரை நடிகை வாணி போஜன் தனது சிறு வயதில் நடந்த பாலியல் தொந்தரவை பற்றி பேசியுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் வாணி ராணி தொடரின் மூலம் பிரபலமான வாணி போஜன்.சமீபத்தில் தனியார் பத்திரிகை நடத்திய உடைத்து பேசுவோம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அப்போது பேசிய அவர் தான் 4 ஆம் வகுப்பு படித்தபோது தனது தோழி ஒருவரை சந்தித்தபிற்காக அவாரது வீட்டிற்கு சென்றுருந்தேன்.அப்போது தனது தோழியின் தந்தை உனது தோழி வீட்டின் மாடியில் உள்ள அறையில் இருப்பதாக கூறினார்.
தாமும் அவரை பார்க்க மாடிக்கு சென்றபோது அந்த தோழியின் தந்தை கதவை அடைத்து தம்மை தொந்தரவு செய்ததாக கூறியுள்ளார்.மேலும் அப்போது தமக்கு சிறு வயது என்பதால் அப்போது ஒன்றும் புரியவில்லை. இதனால் தாம் யாரிடமும் இந்த விஷயத்தை கூறவில்லை.ஒருவேளை கூறியிந்தால் அப்போது என்ன நடந்திருக்கும் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.