1980 நடிகர்களில் ரஜினி கமல் என்று இரு சூப்பர் ஸ்டார்கள் கிடைத்தாலும். விஜயகாந்த் ,பிரபு, சத்யராஜ் என்று மற்றும் ஒருபுறம் சினிமாவில் தனி பாதையில் பயணம் செய்துயிருந்தனர்.இவர்கள் மூவரில் நடிகர் சத்யராஜ் முதலில் வில்லனாக நடித்து பின்னர் ஹீரோவாக தன்னை நிலைநிறுதிக் கொண்டார்.மேலும் இவர் வில்லனாக நடித்தாலும் சரி, ஹீரோவாக நடித்தாலும் சரி இந்த இரண்டிலும் அவருக்கென்று சிறப்பான பல படங்கள் உள்ளன.
1980 களில் தொடங்கி இந்த தலைமுறை வரை சத்யராஜுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். அந்த அளவிற்கு புகழையுடைய சத்யராஜ் இந்த தலைமுறையில் உள்ள விஜய் ,அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.
இவரது மகன் சிபிராஜ் ஒரு தீவிரமான விஜய் ரசிகர் என்பதைவிட வெறியர் என்றே கூறலாம்.சமீபத்தில் பாடல் வெளியிட்டு விழா ஒன்றில் பேசிய சத்யராஜ் தான் விஜய்மீது பெரும் கோவத்தில் இருப்பதாக கூறியுள்ளர்.இதனால் அங்கிருந்தவர்கள் சற்று அதிர்ந்துபோனார்கள்.பின்னர் மேலும் கூறிய சத்யராஜ் நான் ஒரு பிரம்மாண்டமான வீடு கட்டினேன் அந்த வீட்டில் என்னுடைய மகன் சிபிராஜ் தந்தையான என்னுடைய புகைப்படத்தை தானே வைக்கவேண்டும் ஆனால் என் மகன் வீடு முழுக்க நடிகர் விஜயின் புகைப்படத்தை மாட்டியுள்ளார்.இதனால் எனக்கு விஜய் மீது கோபம் வந்துவிட்டது என்று கிண்டலாக கூறியிருந்தார்.
மேலும் நடிகர் விஜய்யிடம் உங்களுக்கு ரசிகர்கள் பல உள்ளனர் அவர்களை நீங்கள் நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும் என்று அன்பு வேண்டுகோலையும் தெரிவித்தார் நடிகர் சத்யராஜ்.