தமிழில் கே. வி ஆனந்த் இயக்கிய அயன் மற்றும் கவன் படங்களில் வில்லனாக நடித்த ஆகாஷ்தீப் சைகல் மும்பையில் இரண்டு ஆட்டோ டிரைவர்களை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நடிகர் ஹிந்தியில் பல தொடர்கலில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் நடந்த சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றவர்.
தற்போது மும்பை பந்த்ரா பகுதியில் 38வது தெருவில் வசித்து வரும் ஆகாஷ்தீப்.அந்த தெருவில் அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரம படுகின்றனர் அதனால் அந்த தெருவை ஒரு வழி பாதயாக மாற்றும்மரு பாந்த்ரா பகுதி போக்குவரத்து போலீசாரிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார்.
அவரின் கோரிக்கையை ஏற்று போக்குவரத்து காவல் துறையினர் அந்த தெருவில் டிவைடர்களை அமைத்தனர்.இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமையன்று அந்த சாலை வழியாக வந்த 2 ஆட்டோ டிரைவர்களுக்கும், சைகல் உள்ளிட்டோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது மற்றும் சிலர் சேர்ந்து 2 ஆட்டோ டிரைவர்களை தாக்கியுள்ளனர்.இதனை அறிந்த பந்தரா காவல் துறை ஆகாஷ்தீப் மீது வழக்கு பதிவு தக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வலுத்து வருகின்றது.