நேசிப்பவர்களிடம் உண்மையாக இருங்கள்! சமந்தாவின் உருக்கமான பதிவு

0
769
- Advertisement -

நேசிப்பவர்களிடம் உண்மையாக இருங்கள் என்று சமந்தா பதிவிட்டு இருக்கும் உருக்கமான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, கடந்த ஒரு வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே.

-விளம்பரம்-

இதனால் இவர் தீவிரமாக சிகிச்சையும் எடுத்து வருகிறார். இந்த நிலையில் செர்பியாவில் உள்ள பிரபல தேவாலயத்தில் சமந்தா வழிபாடு நடத்தி அங்கு எடுத்துக் கொண்டு புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், மயோசிடிஸ் நோயல் பாதிக்கப்பட்டு எனக்கு ஒரு வருடம் ஆகிவிட்டது. என்னுடைய உடம்புக்குள் பல போராட்டங்கள் நடைபெற்றது. பல சவால்களை சந்தித்தேன். சக்கரை, உப்பு, பருப்பு வகைகளை கூட சாப்பிட முடியாத சூழ்நிலை.

- Advertisement -

சமந்தாவின் உருக்கமான பதிவு:

அந்த சமயத்தில் மாத்திரையை மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டேன். சினிமா துறையிலும் பல தோல்விகளை சந்தித்தேன். இந்த வருடத்தில் நிறைய பிரார்த்தனைகள் மற்றும் பூஜைகளை செய்தேன். அந்த பிரார்த்தனைகள், பூஜைகள் அனைத்தும் ஆசிர்வாதங்களையும் பரிசுகளையும் எதிர்பார்த்து நான் செய்யவில்லை. மனவலிமையும் அமைதியும் கொடுக்கத்தான் நான் அதை செய்தேன். நாம் நினைத்தது போல் எதுவும் நடக்காது என்று இந்த வருடம் எனக்கு உணர்த்தியது.

வாழ்க்கை பாடம் குறித்து சொன்னது:

சில சமயம் பெரிய வெற்றி என்பது அவசியம் இல்லை. முன்னோக்கி நகர்வதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறேன். மீண்டும் தானாக சரியாகும் என்று நாம் காத்திருக்கக் கூடாது. கடந்த காலங்களில் நடந்த சுகங்களையும் தோல்விகளையும் நினைத்து அதில் மூழ்கி விடக்கூடாது. நாம் நேசிப்பவர்களிடம் நம்மை நேசிப்பவர்களிடம் எப்போதும் உண்மையாக இருக்க வேண்டும். வெறுப்பு நம்மை பாதிக்கும் அளவுக்கு இடம் கொடுக்கக் கூடாது.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/CtgZ6RGrjeC/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

கடவுள் குறித்து சொன்னது:

உங்களில் பலர் மிக கடினமான சூழ்நிலையை சந்தித்திருப்பீர்கள். உங்களுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். கடவுள் சில விஷயங்களை தாமதம் செய்யலாம். ஆனால், கடவுள் கைவிடமாட்டார். அமைதி அன்பு மகிழ்ச்சி மற்றும் வலிமையை தேடுபவர்களை ஒருபோதும் கடவுள் கைவிட மாட்டார் என்று உருக்கமாக பதிவிட்டு இருந்தார். தற்போது சமந்தாவின் இந்த பதிவுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமந்தாவின் திரைப்பயணம்:

சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சாகுந்தலம். இந்த படத்தை குணசேகர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன், அதிதிபாலன், மலையாள பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். சகுந்தலா மற்றும் துஷ்யந்தின் நித்திய காதல் கதை தான் சாகுந்தலம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று இருந்தது. மேலும் இந்த படம் படு தோல்வி அடைந்தது சமந்தாவிற்கு மன வருத்தத்தை அளித்திருக்கிறது. இதனை அடுத்து தற்போது சமந்தா அவர்கள் குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement