உலகளவில் நடைபெற்ற டேலன்ட் ஷோ “வேர்ல்டு பெஸ்ட். இதில், “இந்தியாவின் சார்பாக தமிழகச் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் கலந்து கொண்டார். முதல் சுற்றில், லிடியன் அதிவேகத்தில் வாசித்த பியானோ இசையை உலகளவில் பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருந்தனர்.
பல கட்ட சுற்றுகளுக்குப் பின், நடந்த இறுதிப்போட்டியில் “வேர்ல்டு பெஸ்ட்” என்ற டைட்டிலைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் சென்னையை சேர்ந்தவர் என்றும், நமது இசை புயலின் மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்க : அபிநந்தன் என்ன ஜாதி என்று இத்தனை லட்சம் பேர் தேடியுள்ளனர்.! நீங்கெல்லாம் திருந்தவே மாட்டிங்களா.!
லிடியனின் சாதனையை நினைத்து பெருமைப்படுபவர்கள் ஒருபுறம் இருக்க , அவரின் பெற்றோர் யார், மதம், சாதி என்ன என்று கூகுளில் பல பேர் தேடி வருகின்றனர். சாதனையை மட்டும் பார்க்காமல் இப்படி இன்னமும் ஜாதியை பார்க்கும் சில கேவலமான பிறவிகள் கூட இருக்கத்தான் செய்கின்றனர்.
இது ஒன்றும் புதிதான விடயம் அல்ல பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகை ரித்விகா தொடங்கி சமீபத்தில் பாகிஸ்தானில் சிக்கி பின்னர் விடுவிக்கபட்ட அபிநந்தன் வரை இந்த ஜாதி வெறியர்களின் தேடுளுக்கு உள்ளானவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.