2019 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் இதையடுத்து இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவில் தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று (ஏப்.29) நான்காம் கட்ட ஓட்டுப்பதிவு 9 மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கு நடக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 17 தொதிகளும் அதில் அடக்கம்.மும்பை மாநகரத் தொகுதிகளில் படு மும்மரமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதையும் பாருங்க : உடல் எடை குறைத்து படு ஒல்லியாக மாறிய மீரா ஜாஸ்மின்.! ரசிகர்கள் ஷாக்.!
மும்பை வடக்கு, மும்பை வடகிழக்கு, மும்பை மத்திய வடக்கு, மும்பை வடமேற்கு, மும்பை தெற்கு, மும்பை தெற்கு மத்திய தொகுதி உள்ளிட்ட தொகுதிகளிலும் நடைபெறுகிறது. அதனால், மும்பை பாலிவுட்டிச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் ஓட்டளித்து வருகின்றனர்.
இந்தியாவில் நேற்று நடந்த தேர்தலில் பாலிவுட் சினிமாவின் நட்சத்திர குடும்பமான ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், மாமியார் ஜெயா, மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் வாக்களித்தனர். வாக்களித்த பின்னர் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். அதில் ஓட்டு போட்டுவிட்டு நடுவிரலை காட்டியது தற்போது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. மேலும், இவர்கள் வரிசையில் நின்று வாக்களிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றனர்.