விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரத்தை நெருங்கியிருக்கிறது இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான எண்ணற்ற போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள் அந்த வகையில் ரம்யா பாண்டியன் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சி முன்பாக இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் பட்டாளம் இருந்தது ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட பின்னர் இவருக்கென்று ஒரு ஹேட்டர்ஸ் கும்பலும் உருவாகி தான் இருக்கிறார்கள் , அதிலும் கடந்த சில வாரமாக ஆரி மீது இவர் காட்டும் வெறுப்பு அப்பட்டமாகவே தெரிகிறது. இதனாலேயே இவரை ஆரியின் ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆரி, ஆஜித், சிவானி, கேப்ரில்லா, அனிதா, சம்பத் ஆகியோர் நாமினேட் ஆகியிருந்தார்கள். எனவே, இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், இந்த வாரம் அனிதா சம்பத் அல்லது ஆஜித் ஆகிய இருவரில் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர் பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போலவே இந்த வாரம் அனிதா தான் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
அதே போல நேற்றய நிகழ்ச்சியில் ஆரி காப்பாற்றப்பட்டு இருந்தார். நேற்றய நிகழ்ச்சியில் யார் வெளியேறப்போகிறார்கள் என்று பல டிஸ்கஷன் நடந்தது. நேற்றய நிகழ்ச்சியில் ரம்யாவிடம் ஆரி, இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்று கேட்டதற்கு ரம்யா, அனிதா பெயரை கூறி இருந்தார். ஆனால், இதே ரம்யா, தான் கடந்த வெள்ளிக்கிழமை Unseen வீடியோவில் அனிதாவிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது ஆரி தான் இந்த வாரம் வெளியே போவார் , ஆரி, இந்த வாரம் வெளியில் செல்வதால் தான் அவருக்கு 10 ரூபாய் பரிசு கொடுத்து இருகாங்க என்று காமெடி செய்து இருந்தார் ரம்யா பாண்டியன்.
அந்த வீடியோ கூட சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அதே போல நேற்றய நிகழ்ச்சியில் ஆரி காப்பாற்றப்பட்ட பின்னர் ரம்யா பாண்டியன் ஆஜீத்திடம் பேசிக்கொண்டு இருக்கும் போது கேப்ரில்லாவை கண் காண்பித்து இவர் தான் வெளியே போகப் போகிறார் என்று கூறியிருந்தார் ரம்யா. ஆனால், அதற்கு ஆஜீத் கண்டிப்பாக இல்லை என்று கூறி இருந்தார். இப்படி ஒரே சமயத்தில் ஆரி, அனிதா, ஆஜீத் ஆகிய மூவரிடமும் ரம்யா பாண்டியன் மாறி மாரி பேசியுள்ளார் .
இப்படி ஒரு நிலையில் ரம்யா பாண்டியனின் இந்த செயல்களை கேலி செய்துள்ளார் நடிகரும் சிவாஜி பேரனுமான சிவகுமார். இவர் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான சுஜா வருணியின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது . சமீபத்தில் ரம்யா பாண்டியன் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிவகுமார், அனிதா கிட்ட நயிட்ரகசியமா ஒரு பயங்கரமான தியரி சொல்லி ஆசாரி எலிமினேட் ஆவர்னு சொன்னாங்க.
ஆரி கேக்கும் போது அனிதா தான் எலிமினேட் ஆவர்னு சொன்னாங்க. ஆரி கேக்கும்போது அனிதா தான் எலிமினேட் ஆவான்னு சொல்றாங்க. கடைசியா அனிதா நான் தான் கண்டிப்பா எலிமினேட்னு சொல்லும் போது, கண்டிப்பா இல்லன்னு சொல்றாங்க. இது சாதாரண நடிப்பில்லடா சாமி , கேலக்சி லெவல் நடிப்பு என்று கேலியாக பதிவிட்டுள்ளார். அவர் சொன்ன கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்து வருகின்றனர்.