தனது இரண்டு குழந்தைகளுடன் 30வது பிறந்தநாளை கொண்டாடிய ரேஷ்மி – இனிது இனிது படத்துல எப்படி இருந்தாங்க.

0
4773
reshmi
- Advertisement -

சினிமாவில் பல்வேறு நட்சத்திர தம்பதிகள் திருமணம் செய்து கொண்டு மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள், அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா பிரசன்னா-சினேகா, கிருஷ்-சங்கீதா போன்ற பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பாபி சிம்மா மற்றும் ரேஷ்மி ஜோடிகளும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திர தம்பதிகள் ஆவார்கள். தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் நடிகர் பாபி சிம்ஹா.

-விளம்பரம்-

பாபி சிம்ஹா, ஹீரோ வில்லன் என பல வேடங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.2012 இல் வெளியான காதலில் சுதப்புவது எப்படி என்ற படத்தில் அறிமுகமான இவர்.அதன் பின்னர் பீஸா,சூது கவ்வும் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் ஜிகிர்தண்டா படத்தில் தனது வயதிற்குமீறிய நடிப்பை வெளிப்படுத்தியிருந்த இவருக்கு 2014 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.

இதையும் பாருங்க : லாக்டவுனால் முடங்கிய சினிமா தொழில் – வருமானம் இல்லாமல் லட்ச கணக்கில் கொள்ளையடித்த டிவி நடிகைகள்.

- Advertisement -

இவர் திருமணம் செய்து கொண்ட ரேஷ்மியும் தமிழ் சினிமாவில் பலரும் அறியப்பட்ட ஒரு நடிகை தான்.நடிகை ரேஷ்மி 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ஆல்பம்’ என்ற படத்தில் ஸ்ருதியின் தங்கையாக நடித்திருந்தார். அதே போல ஜெயம் ரவி அறிமுகமான ‘ஜெயம்’ படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் ரேஷ்மி மேனன். அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘இனிது இனிது’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரேஷ்மி மேனன்.

அந்த படத்தில் இளசுகள் மனதை கொள்ளைகொண்ட ரேஷ்மி, அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.பின்னர் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘உறுமி’ படத்தில் பாபி சிம்மாவுடன் நடித்தார் ரேஷ்மி. அந்த படத்தின் போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் 2016 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்திகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். தனது 30வது பிறந்தநாளை கணவர், குழந்தைகளுடன் அழகாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் ரேஷ்மி.

-விளம்பரம்-
Advertisement