முதல்வர் தலைமையில் நடைபெற்ற நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட நடிகரின் திருமணம் – இவர் யாருடைய மகன் தெரியுமா?

0
242
Rajkumar
- Advertisement -

முதல்வர் தலைமையில் நடிகர் ராஜ்குமாரின் திருமணம் நடைபெற்று இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதியின் நடிப்பில் வந்து மக்கள் மத்தியில் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ராஜ்குமார். இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். இந்தப் படத்தை தொடர்ந்து இவர் வணக்கம் சென்னை, நவீன சரஸ்வதி சபதம், வேதாளம், விக்ரம் வேதா, என்கேஜி, துலக்கி தர்பார், விரும்பன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது. தற்போதும் இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். மேலும், இவர் திமுக கட்சி பிரமுகரான மதுரை திருமங்கலம் கோபால் அவர்களின் கடைசி மகன் ஆவார். இந்த நிலையில் நடிகர் ராஜ்குமாருக்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சஜூ. இவரின் பெற்றோர்கள் தான் சாகுல் அமீது மற்றும் ஷகிலா பானு. மேலும், ராஜ்குமார்- சஜு ஆகியோருக்கு நிச்சயதார்த்தம் நடந்து இருக்கிறது.

- Advertisement -

ராஜ்குமார்- சஜு திருமணம்:

இன்று இவர்களின் திருமணம் சென்னையில் உள்ள காமராஜ் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் திமுக முதல்வர் மு க ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே. என். நேரு, டி. ஆர். பாலு, சேகர் பாபு, சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி, திமுகவின் செய்தி தொடர்பாளர் டி. கே. எஸ். இளங்கோவன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கலந்து இருக்கிறார்கள்.

வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்:

இவர்களை தொடர்ந்து திரைப்பட இயக்குநர்கள் புஷ்கர் -காயத்ரி, பாலாஜி தரணிதரன், டெல்லி பிரசாத் தீனதயாள், நடிகர் பக்ஸ் என்ற பகவதி பெருமாள், நடிகை காயத்ரி, இயக்குநர் கார்த்திக், ஒளிப்பதிவாளர் சரஸ் காந்த், இயக்குநரும், தயாரிப்பாளருமான ராஜ், படத்தொகுப்பாளர் கோவிந்த், இயக்குநர் அமிர்தராஜ் போன்ற திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார்கள். திருமணம் முடிந்த பிறகு முதல்வர் மு க ஸ்டாலின், திருமங்கலம் கோபால் அவர்களின் மனைவியார் சரோஜினி அவர்கள் நன்றி உரை ஆற்றுகையில் சில செய்தியினை சொன்னார்.

-விளம்பரம்-

மு க ஸ்டாலின் வாழ்த்து:

அதாவது திருமங்கலம் கோபாலின் திருமணத்தையும் தலைவர் கலைஞர் தலைமையேற்று நடத்தி வைத்தார். அவரது மூன்று பிள்ளைகளின் திருமணத்தையும் தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது என்று குறிப்பிட்டார். அவரது நான்காவது மகனான ராஜ்குமாரின் திருமணம் என் தலைமையில் நடைபெறுகிறது. இனி அவரது வாரிசுகளுக்கு பேரனோ, பேத்தியோ அவர்களுக்கும் என் தலைமையில் திருமணத்தை நடத்தி வைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயம் இருக்கிறது. அந்த அளவிற்கு நாங்கள் உரிமை பெற்றவர்கள்.

திருமங்கலம் கோபால் குறித்து சொன்னது:

அந்த அளவிற்கு எங்கள் மீதும் கழகத்தின் மீதும் ஈடுபாடு கொண்டவர்கள் திருமங்கலம் கோபால் குடும்பத்தினர். திருமங்கலம் கோபால் கட்சிக்காக அரும் பாடுபட்டு தொண்டாற்றியவர். அவர் எப்போதும் மிடுக்காகவே இருப்பார். தலைவர் கலைஞர் அவர்களும், பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும் திமுகவின் துணை அமைப்பாக இளைஞர் அணி என்ற ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். அதற்காக நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஏறத்தாழ 30 சதவீத அளவிற்கு எனக்கு பாதுகாப்பாக என்னுடன் பயணித்தவர் தான் திருமங்கலம் கோபால் என்று கூறி இருந்தார். தற்போது ராஜ்குமார் திருமண புகைப்படம் வெளியானதை தொடர்ந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்

Advertisement