தற்போது தமிழ் சினிமாவின் இரண்டு பிரபலமான சகோதரர்கள் என்றால் நடிகர் கார்த்திக்கும் ,சூர்யாவும் தான்.இவர்கள் இருவரும் பழம்பெரும் நடிகர் சிவகுமாரன் மகன் என்று நாம் அனைவரும் அறிவோம்.ஆனால் நம்மில் பல பேர் இவர்கள் இருவரர் மட்டும் தான் சிவகுமாரின் பிள்ளைகள் என்று நினைத்திருந்தோம்.ஆனால் நடிகர் சிவகுமாருக்கு பிருந்தா ஒரு மகளும் உள்ளார்.அவரும் தற்போது “சந்திரமௌலி “என்ற படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்து விட்டார்.
பொதுவாக பிருந்தா எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை அதனால் இவரது முகம் மீடியாக்கலில் அந்த அளவிற்கு பதியவில்லை.சிறுவயது முதலே பைன் ஆர்ட் எனப்படம் ஓவியம் வரையும் கலையிலும் சங்கீதத்திலும் மிகுந்த ஆற்வம் கொண்டவர். இவர் 2005 இல் கருரை சேர்ந்த கிரானைட் தொழிலதிபர் சிவகுமார் என்ற நபரை திருமணம் செய்துகொண்டார்.
தனது சிறு வயதிலிருந்தே சங்கீததில் ஆர்வம் கொண்ட பிருந்தா .சங்கீதத்தை முறையாக கற்று சினிமாவில் பாட முயற்சி செய்து வருகிறார் என்று ஏற்கனவே நமது பக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். இதனால் அவர் விரைவில் சினிமாவில் பட வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் நடித்துள்ள சந்திரமௌலி என்ற படத்தில் ஒரு பாடலை படி உள்ளாராம் பிரிந்தா.
சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த படத்தில் பாடல்களை நடிகர் மாதவன் வெளியிட்டிருந்தார் மேலும், அந்த படத்தில் “சந்திரமௌலி “என்ற பாடலை சிவகுமாரின் மகள் பிருந்தா படியுள்ளாராம். சந்திரமௌலி படத்தின் தீம் மியூசிக் பாடலாக அந்த பாடல் ரசிகர்களை கவரும் என்று அந்த படத்தின் இசையமைப்பாளர் சாம் தெரிவித்துள்ளார்.