தென்னிந்தியாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூரியா. இவரது தம்பி கார்த்திக்கும் தென்னிந்திய சினிமாவில் நடித்து வருகிறார். இவர்களது அப்பா சிவகுமார் ஒரு நடிகர். இவர்களது குடும்பம் ஒரு சினிமா குடும்பம்..
சூர்யாவிற்கு தம்பி கார்த்தியை தவிர, கடைசியாக பிறந்த ஒரு தங்கையும் இருக்கிறார். 1980ஆம் ஆண்டு பிறந்த இந்த தங்கையின் பெயர் பிருந்தா சிவகுமார். சின்ன வயதில் இருந்தே தன் தந்தையை போலவே வரைகலை கற்றுக்கொண்டார் பிருந்தா. அதில் கற்றுத்தேர்ந்த பிருந்தா நன்றாக வரைந்து பல பரிசுகள் பெற்றுள்ளார்.
கடந்த 2005ஆம் ஆண்டு பிருந்தாவிற்கும் ஒரு கிரானைட் தொழில் அதிபர் சிவகுமாருக்கும் திருமணம் ஆனது. இந்த திருமணத்தில் பல திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர். அன்றைய முதல்வரான ஜெ.ஜெயலலிதாவும் கலந்துகொண்டு தாலி எடுத்துக்கொடுத்தார்.
இந்த திருமணம் விழாவில் பேசிய சிவகுமார், எனக்கு கார்த்தியும் – சூர்யாவும் இரண்டு கண்கள் என்றால் பிருந்தா என் உயிர் எனக் கூறினார். அந்த அளவிற்கு மகள் மீது பாசம் வைத்துள்ளார் சிவக்குமார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு விழிப்புணர்விற்காக மிக நீண்ட ஓவியத்தை சிவாகுமாரும் மகள் பிருந்தாவும் சேர்ந்த வரைந்தனர்.
மேலும், பிருந்தாவிற்கு பாடுவது பிடிக்குமாம். இதனால் தற்போது சங்கீதம் கற்று வருகிறார் பிருந்தா. தனது தங்கை பிருந்தா பாடுத்தவற்காக, ஏ.ஆர் ரஹ்மானிடம் வாய்ப்பு கேட்டு வைத்துள்ளார் பாசக்கார அண்ணன் சிங்கம் சூரியா.