உடல்நிலை மோசமாக இருந்தும் கடைசிவரை போராடுவோம்- வேதனையில் அப்பீல் போட்ட சித்ரா குடும்பம்

0
310
- Advertisement -

சித்ரா வழக்கு தொடர்பாக அவருடைய பெற்றோர்கள் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவை யாரும் மறந்து இருக்க மாட்டீர்கள். சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் தொகுப்பாளினி, நடிகை, விஜே மாடலிங் என பல திறமைகளைக் கொண்டு இருந்தார். தான் வாழ்ந்த கடைசி நாட்களில் முல்லை என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சித்ரா.

-விளம்பரம்-

இவருடைய மரணம் இன்றும் யாராலும் நம்பவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அந்த அளவிற்கு ரசிகர்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை அனைவரையும் பாதித்த ஒன்று. சித்ரா தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்த சம்பவம் பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சித்ரா சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே பெங்களூரு பைபாஸ் சாலையில் அமைந்திருக்கும் ஹோட்டலில் தனது கணவர் ஹேமநாத்துடன் தங்கியிருந்தார்.

- Advertisement -

சித்ரா தற்கொலை :

அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு இருந்தார். இவர் தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் அவர் கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று அவர் பெற்றோர்கள் புகார் அளித்து இருந்தார்கள். அதன் பெயரில் ஹேம்நாத்தை போலீஸ் கைது செய்து இருந்தது. அதன் பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதோடு சித்ரா இறந்து நான்கு ஆண்டு முடிந்துவிட்டது. ஆனால், இவருடைய மரணத்திற்கு காரணம் என்ன? தற்கொலையா? கொலையா? அதற்கு காரணமானவர்கள் யார்? சித்ராவிற்கு நீதி கிடைத்ததா? என்று இன்னும் விடை தெரியாமல் இருந்தது.

சித்ரா மரணம் குறித்த சர்ச்சை:

இப்படி ஒரு சூழ்நிலையில் சித்ரா மரணத்திற்கு அரசியல்வாதிகள், பிரபலங்கள் தான் காரணம். என் உயிர்க்கும் ஆபத்து இருக்குது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று ஹேமநாத் கடந்த ஆண்டு பேட்டி ஒன்று அளித்து இருந்தார். இப்படி இவர் கூறியதை அடுத்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இன்னொரு பக்கம் சித்ராவின் இறப்பு குறித்து மரண வழக்கு நடந்து கொண்டு தான் இருந்தது. ஆனால், தீர்ப்பு கிடைத்தப்பாடு இல்லை. இதனால் சித்ராவின் பெற்றோர்கள் திருவள்ளூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறி இருந்தார்கள்.

-விளம்பரம்-

நீதிபதி உத்தரவு:

இதை அடுத்து சமீபத்தில் இந்த வழக்குக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சித்ராவின் மரணத்திற்கு ஹேம்நாத் தான் காரணம் என்று அவருக்கு எதிராக எந்த ஒரு ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால் இந்த மரண வழக்கில் இருந்து சித்ரா கணவர் ஹேம்நாத்தை விடுவிக்க திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை கேட்டு சித்ராவின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் சித்ராவின் அம்மா, என்ன சொல்வது என்று தெரியவில்லை.

சித்ரா அம்மா பேட்டி:

முதலில் நசரத்பேட்டையில் இருந்து சென்னை கமிஷனர் ஆபீசுக்கு கேஸை மாத்தினார்கள். பிறகு கமிஷனர் ஆபீசை பிரித்து விட்டார்கள் என்று ஆவடிக்கு மாற்றினார்கள். அதேபோல் முதலில் வேறு ஒரு நீதிபதி இருந்தார். கடைசியில் புதிதாக வந்த நீதிபதி ஒரு மாதத்தில் தீர்ப்பு சொல்லி விட்டார். அவர்கள் சொன்ன தீர்ப்பை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவளுடைய அப்பாவுக்கு நாளுக்கு நாள் உடல்நிலை மோசமாகி கொண்டே வருகிறது. இருந்தாலும் முடிந்தவரை போராடுவோம். இதை விடக்கூடாது என்று அவர் சொன்னார். அதனால் தான் அப்பீல் போயிருக்கோம். செலவு தான் ஆகும். ஏற்கனவே அவள் ஆசையாக வாங்கின கார் டீவ் கட்ட முடியல என்று எடுத்துக்கொண்டு போக சொல்லிவிட்டோம். ஆனாலும், கடவுள் இருக்கிறார் என்ற ஒரு நம்பிக்கையில் தான் நாங்கள் அப்பீல் போட்டு இருக்கிறோம் என்று கண் கலங்கிக் கொண்டே கூறியிருக்கிறார்.

Advertisement