பிளாட்டாக மாறிய நிலத்தை வாங்கி தேவயானி எப்படி மாற்றியுள்ளார் பாருங்க – குவியும் பாராட்டு.

0
9721
devaiyan
- Advertisement -

சமீபகாலமாகவே விவசாயத்தில் பல புரட்சிகள், போராட்டங்கள் ஏற்பட்டு வருகிறது. மழையில்லாமல், நகரமயமாக்கல் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் விவசாயிகளுக்கும், விவசாயத்திலும் பல நஷ்டங்கள் ஏற்பட்டு ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். இந்த நிகழ்வு அனைவரும் அறிந்த ஒன்று. இதனைத் தொடர்ந்து பெரும்பாலான விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்க தொடங்கியுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் ரியல் எஸ்டேட் முதலாளிகள் விவசாய நிலங்களை கூறு போட்டு விற்பனை செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானியின் செயல் பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. நடிகை தேவயானி அவர்கள் ஈரோடு அருகே தனது தோட்டத்துக்கு பக்கத்தில் மனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்திருந்த பிளாட்களை வாங்கி அதில் விவசாயம் செய்து உள்ளார். நடிகை தேவயானியின் கணவர் இயக்குனர் ராஜகுமாரன். இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த சந்திப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர். தேவயானி தம்பதிகள் அடிக்கடி தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள்.

இதையும் பாருங்க : சர்க்கார் படத்தில் சிம்டாங்காரன் பாடலின் வந்த நடிகை, பிகினி உடையில் கொடுத்த போஸ்.

- Advertisement -

மேலும், இவர்கள் அருகிலுள்ள மாத்தூரில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் அடிக்கடி அவர்கள் ஊருக்கு சென்று தங்கள் விவசாய நிலங்களை குழந்தைகளுடன் பார்த்து வருவார்கள். இந்த நிலையில் அவர்களது தோட்டத்துக்கு அருகே இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தை ஃப்ளாட் ஆக மாற்றியுள்ளனர். இதை அறிந்த தேவயானி அந்த நபரிடம் இரண்டு ஏக்கர் வீட்டு மனைகளையும் விலைக்கு வாங்கியுள்ளார். பின் அதை விவசாய நிலமாக மாற்றி தற்போது இரண்டு ஏக்கரில் செண்டுமல்லி பயிரிட்டுள்ளார்.

தற்போது அந்த விவசாய நிலம் முழுவதும் செண்டுமல்லி பூத்து குலுங்குகிறது. இதை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளது. தற்போது திருவிழாவுக்காக சொந்த ஊர் வந்த தேவயானி குடும்பத்தினர் தங்களின் மல்லி தோட்டத்தை சுற்றிப் பார்த்து மகிழ்ந்துள்ளனர். விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டு வரும் நிலையில் நடிகை தேவயானியின் இந்த செயல் குறித்து அப்பகுதி விவசாயிகள் பாராட்டி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement