சமீப காலமாகவே சினிமாவில் உள்ள பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக கூறி வருகிறார்கள். சினிமா துறையை பொறுத்தவரை நடிகைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை வருவது வாடிக்கையான ஒரு விஷயம் தான். ஆனால், கடந்த சில காலமாக பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக கூறி வருகிறார்கள். அதுவும் மீடு(Mee Too) விவகாரம் தலையெடுத்து ஆடுகிறது. நடிகைகள் பலரும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவதாக Me Too ஆன்லைன் மூலம் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினர்.
அந்த வகையில் தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பல பேர் மீது குற்றச்சாட்டி உள்ளார்கள். இதில் பல பேர் மாட்டி உள்ளார்கள். இந்நிலையில் தற்போது இன்னொரு நடிகையும் புகார் கூறியுள்ளார். நடிகை மான்வி கக்ரூ அவர்கள் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை குறித்து கூறி உள்ளார். இவர் No One Killed Jessica மற்றும் P.K உள்ளிட்ட சில படங்களில் நடித்து உள்ளார்.
அதோடு இவர் தொலைக்காட்சி தொடர்கள், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை மான்வி கக்ரூ பேட்டி ஒன்று அளித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, ஒரு முறை எனக்கு ஒருவர் கால் செய்து இயக்குனர் பேசுகிறேன் என்று சொன்னார். பிறகு அவர் நாங்கள் ஒரு வெப் சீரிஸ் எடுக்கிறோம். அதில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.
அதோடு இவர் தொலைக்காட்சி தொடர்கள், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை மான்வி கக்ரூ பேட்டி ஒன்று அளித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, ஒரு முறை எனக்கு ஒருவர் கால் செய்து இயக்குனர் பேசுகிறேன் என்று சொன்னார். பிறகு அவர் நாங்கள் ஒரு வெப் சீரிஸ் எடுக்கிறோம். அதில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.
அதற்கு நான் முதலில் கதையை சொல்லுங்கள் எனக்கு பிடித்து இருந்தால் நான் நடிக்கிறேன். பின் என்னுடைய சம்பளம் உள்ளிட்ட மற்ற விஷயங்களை எல்லாம் பேசலாம் என்றேன். அதற்கு அவர் உடனே எனது சம்பளம் குறித்து சொன்னார். ஆனால், அவர் சொன்ன சம்பளம் குறைவாக இருக்கிறது என்றேன். உடனே அவர் என்னுடைய சம்பளத்தை மூன்று மடங்காக உயர்த்தி இந்த சம்பளம் போதுமா என்று கேட்டார்.
அவர் சம்பளத்தை உயர்த்திய உடனே எனக்கு என்ன சொல்லறது என்று புரியாமல் அதிர்ந்து போய் நின்றேன். அதன்பிறகு அந்த இயக்குனர் என்னால் இவ்வளவு சம்பளம் உங்களுக்கு கொடுக்க முடியும். ஆனால், அதற்கு பதிலாக நீங்கள் எனக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார். இதை கேட்டு எனக்கு பயங்கர கோபம் வந்தது. பின் நான் அவரை கண்டபடி திட்டினேன். இப்படி பேச உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்? போலீசில் புகார் செய்வேன் என்று கோபமாக பேசிவிட்டு போனை வைத்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
இப்படி இவர் கூறிய புகார் இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கம் போல அந்த நடிகை யார் அந்த இயக்குனர்? அவர் பெயர் என்ன? என்று எதுவுமே சொல்லவே இல்லை. இப்படியான நடிகைகள் நிஜமாகவே இது போன்ற தும்புருத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா..? அல்லது விளம்பரம் மற்றும் மீடியாவில் பெயர் வரவேண்டும் என்பதற்காக இவர்களே ஏதாவது கிளப்பி விடுகிறார்களா..? என்பது தான் சிதம்பர ரகசியமாக உள்ளது.