ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த அகல்யாவிற்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை நிகழ்ச்சிகள் திகழ்கிறது. அதிலும் ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனலின் டிஆர்பி ரேடிங்காக பல்வேறு வித்தியாசமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள். மேலும், டிவி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகிறதோ? இல்லையோ ஆனால், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விடுகிறார்கள்.
அந்த வகையில் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தொகுப்பாளினி அகல்யா வெங்கடேசன். இவர் தன்னுடைய காமெடியான பேச்சாலும், எதார்த்தமான குணத்தாலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டிருக்கிறார். மேலும், எல்லோருக்கும் பிடித்தமான நகைச்சுவை சேனல்களில் ஒன்று தான் ஆதித்யா. இந்த ஆதித்யா சேனலில் பிரபல தொகுப்பாளினி ஆக பணியாற்றி வருகிறார் அகல்யா வெங்கடேசன்.
அகல்யா நடித்த படங்கள் :
அதிலும் நீங்க சொல்லுங்க டூட் என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதோடு இவர் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மட்டுமில்லாமல் ஒரு சில படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அகல்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சந்தோசமான செய்தி என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் :
அது என்னவென்றால், தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும், விரைவில் தனக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் அறிவித்து தன்னுடைய வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுஇருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் அகல்யாவுக்கு வாழ்த்துக் கூறி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் அகல்யாவிற்கு இன்று திருமணம் முடிந்துள்ளது.
சப் – இன்ஸ்பெக்ட்டருடன் திருமணம் :
மேலும், இது முழுக்க முழுக்க பெற்றோர்களால் நிச்சயாகப்பட்ட திருமணமாம். திருவண்ணாமலை கோவிலில் தான் இவர்களது திருமணம் நடைபெற்று இருக்கிறது. அகல்யாவின் கணவர் அருண் குமார் தமிழ்நாடு காவல் துறையில் சப் – இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். மேலும், இவர்கள் திருமணத்தில் எந்த ஒரு திரைப்பிரபலங்களும் பங்கு பெறவில்லை. அகல்யா மற்றும் அருணின் பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்று இருந்தனர்.
சென்னையில் திருமண வரவேற்பு :
இருப்பினும் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 8-ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. அந்த நிகழ்வுக்கு மீடியாத்துறை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி, சசிகுமார் போன்ற பிரபலங்கள் நிச்சயம் திருமண வரவேற்பில் கலந்து கொள்வார்கள் என்று அகல்யா வட்டாரத்தில் கூறப்படுகிறது. அகல்யாவின் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.