இப்படி ஒரு ஸ்மார்ட்டா,அழகா ஒரு மினிஸ்டர் கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும் – மேடையில் ஐஸ் வைத்த ஐஸ்

0
462
- Advertisement -

எனக்கு திருமணம் செய்து கொள்ள ஆசை என்று விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் திரைப்பட நடிகை, நடன கலைஞர், தொகுப்பாளினி என பன்முகம் கொண்டவர். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும் கனா படம் மூலம் தான் இவருக்கு நல்ல பெயர் ஏற்படுத்தி தந்தது. அதோடு சமீப காலமாக இவர் பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி நடித்த “ரன் பேபி ரன்” என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். ஆனால், அது ஒரு சிறிய கதாபாத்திரம் தான்.

- Advertisement -

ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்பயணம்:

அதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் வெளிவந்த “சொப்பன சுந்தரி” என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து இருந்தார். இப்படத்தை எஸ்.எஸ்.சார்லஸ் இயக்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. பின் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்த படம் ஃபர்ஹானா. இந்த படமும் ஓரளவு நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. பின் கடைசியாக இயக்குனர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் வெளிவந்த படம் தீராக் காதல்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படங்கள்:

இந்த படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நாயர் உட்பட பல நடிகர்கள் நடித்தார்கள். இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் மலையாளம், இந்தி, தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் ஜி.வி பிரகாஷ் உடன் டியர் என்ற படத்தில் ஐஸ்வர்யா நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

பொங்கல் விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ்:

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இலங்கையில் நுவரெலியோ மாவட்டத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டிருந்தார். இவருடன் சம்யுக்தா மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இவர்களை எல்லாம் அமைச்சர் ஜீவன் தான் அழைத்து வரவேற்று இருந்தார். பின் இந்த விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், நான் நினைத்தது போல பொங்கல் கொண்டாட்டம் சிறப்பாக இருந்தது.

திருமணம் குறித்து சொன்னது:

அமைச்சர் என்று சொன்னவுடன் அவர் வயதான நபராக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால், அவருக்கு வயது ரொம்ப குறைவு. அவர் ரொம்ப அழகாகவும் இருக்கிறார். முதல்முறையாக குறைவான வயதில் ஒருவர் அமைச்சராக இருக்கிறார். அமைச்சர் ஜீவன் நிறைய நல்ல விஷயங்களை செய்து இருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இது மக்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருப்பதாக நான் நினைக்கிறேன். அதே சமயம் எனக்கு திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளணும் என்றெல்லாம் ஆசையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதை அறிந்த நெட்டிசன்கள், எப்போது திருமணம்? யாரையாவது காதலிக்கிறீர்களா? என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள்.

Advertisement