சூப்பர் ஹிட் சீரியலின் அடுத்த பாகம் – மீண்டும் இணையும் சஞ்சீவ் – ஆல்யா ஜோடி. இது சூப்பர் சீரியல் ஆச்சே.

0
882
sanjeev
- Advertisement -

ஆல்யா மானசா- சஞ்சீவ் நடிக்க இருக்கும் புதிய தொடர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. சின்னத்திரைக்கு முன்பு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று இருந்தார் ஆல்யா.

-விளம்பரம்-

பின் ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யாவும், சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தார்கள். இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டார் ஆல்யா.

- Advertisement -

ஆல்யா- சஞ்ஜீவ் நடிக்கும் சீரியல் :

பின் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆல்யா கலக்கிக் கொண்டு வந்தார். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் சமீபத்தில் தொடங்கிய கயல் சீரியலில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். கர்ப்பமாக இருந்தாலும் ஆல்யா சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார்.

ஆல்யாவுக்கு பிறந்த குழந்தை:

ஆனால், ஆல்யாவிற்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார். ஆல்யா விலகியதை அடுத்து தற்போது சீரியலில் ஆல்யா மானஸாவிற்கு பதிலாக ரியா என்பவர் புதிய சந்தியாவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆல்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறார். ஏற்கனவே முடிவு செய்தபடி ‘அர்ஷ்’ என்று பெயர் வைத்துள்ளனர். தற்போது ஆல்யா மொத்தமாக சின்னத்திரைக்கு பாய் சொல்லி விட்டார்.

-விளம்பரம்-

யூடியூப் சேனல் :

ஆனால், சஞ்சீவ் கயல் சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டு வருகிறார். மேலும், இருவரும் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றன. அதில் அவ்வப்போது அவர்கள் எடுக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்களுடைய சேனலை லட்சக்கணக்கான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். தற்போது ஆல்யா குடும்பம், குழந்தைகள், கணவருடன் தன்னுடைய நேரத்தை செலவழித்து வருகிறார். தாங்கள் தொடங்கியுள்ள சேனல் மூலம் ஆல்யாவை தினமும் ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

ஆல்யா மானசா- சஞ்சீவ் நடிக்கும் புது சீரியல் :

இந்நிலையில் ஆல்யா மானசா- சஞ்சீவ் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இருவரும் ஒன்றாக இணைத்து சரவணன் மீனாட்சி என்ற தொடரில் புதிய பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வந்தது. இதனால் ரசிகர்கள் பலர் உற்சாகத்தில் இருந்தார்கள். ஆனால், இந்த தகவல் எல்லாம் உண்மை இல்லை, வதந்தி என்று அறிவித்துவிட்டார்கள். தற்போது இது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Advertisement