அமைச்சர் பொன்முடியின் வழக்கை வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்ற லஞ்ச ஒழிப்பு துறை கோரிக்கை. அதிரடி தீர்ப்பளித்த நீதிபதி.

0
664
- Advertisement -

திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் எம் பி கௌதம சிகாமணிக்கு எதிராக சட்ட விரோத பணம் பரிமாற்ற தடை சட்டம் வழக்கை வேறு நீதிபதி அமர்வுக்கு மற்ற கோரிய மனுவை செப்.14 தேதிக்கு ஒத்திவைப்பு. செம்மண் எடுத்தல் முறை கேடாக கிடைத்த பெரும் தொகையை ஹவாலா பரிவர்த்தனை முழு வெளிநாடுகளில். நிறுவனங்களில் முதலீடு செய்வதால். அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் எம்பி கௌதம சிகாமணி  தொடர்புடைய இடங்களில் அமலாக்க துறை சோதனை நடத்தியது.

-விளம்பரம்-

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிரிட்டன் பவுண்டுகள்  உட்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தது. இந்த வழக்கில் கௌதம் சிகாமணி உட்பட ஆறு பெயர் வழக்கத்துறை குற்றப்பத்திரிகை தகவல் செய்துள்ளது. அதில் முக்கிய 6 சாட்சிகள் பிறழ் சாட்சியங்களாக மறியுள்ளது. வழக்கை ஒத்தி வைத்தது விழுப்புரம் நீதிமன்றம்.

- Advertisement -

வழக்கு விபரம்:

செம்மண் குவாரி மூலம் தமிழக அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சட்டவிரோத பணம் மாற்று தடை சட்டத்தின் அமைச்சர் பொன்முடி மீதும் அவரது மகனும் எம்.பியும் மான கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்க துறை 90 பக்க குற்றபத்திரிக்கையை சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. தற்போது உயர்கல்வி துறை அமைச்சரும் அவரது மகன் எம்.பி கவுதம சிகாமணி மீதும் கடந்த 2006 முதல் 2011 ஆட்சி காலத்தில் அப்போதைய கனிமவள துறை அமைச்சர் பொன்முடியும் அவரது மகண் உட்பட 6 பேர்கள் மீது சட்ட விரோதமாக செம்மண் குவாரிகளில் செம்மண் எடுத்து தமிழக அரசுக்கு 28கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் விழுப்புர குற்றப்பிரிவு போலிசார் 2012ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கானது தற்போது விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட லோகநாதன் மட்டுமே இறந்த நிலையில் இந்த வழக்கானது சட்ட விரோதபணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் திமுக எம்பி கவுதமசிகாமணி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில் தான் அமலாக்க துறை கடந்த மாதம் அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அவரது மகன் கவுதம சிகாமணி வீட்டிலும் ஆய்வு நடத்தியது.

-விளம்பரம்-

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிரிட்டன் பவுண்டுகள்  உட்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தது.  இந்த வழக்கில் கௌதம் சிகாமணி உட்பட ஆறு பேர் வழக்கத்துறை குற்றப்பத்திரிகை தகவல் செய்துள்ளது. தற்போது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி முன்பாக 90 பக்க குற்றப்பத்திரிக்கையை அமலாக்க துறை தாக்கல் செய்தது.

நீதிபதியின் தீர்ப்பு:

இந்த வழக்கை தமாக முன் வந்து எடுத்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் இடம் இருந்து வழக்கை வேறு நீதிபதி மாற்ற வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறை மனு ஒன்றை அளித்துள்ளது. இந்த வழக்கானது இன்று (7-9-2023) அன்று நீதிபதி வெங்கடேஷ் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கை தாமே விசாரிப்பதா அல்லது வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவதா? இது குறித்து தீர்ப்பை செப்.14 அன்று ஒத்திவைத்துள்ளார் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ்.      

Advertisement