தமிழ் சினிமாவின் இசைப்புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் தன் தாயாருக்கு பிரம்மாண்ட கல்லறையை கட்டி இருக்கிறார். ” இசைப்புயல், மொசார்ட் ஆஃப் மெட்ராஸ்” என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். ஏ.ஆர். ரகுமான் அவர்களின் உண்மையான பெயர் திலீப் குமார். இவர் தன்னுடைய 23வது வயதில் மதகுரு, காத்ரி இஸ்லாமின் வழிகாட்டுதலோடு இஸ்லாம் மதத்தை தழுவினார். இவருடைய அப்பா பெயர் ஆர்.கே.சேகர். இவர் மலையாளத்தில் 50 படங்களுக்கு மேல் இசையமைத்தவர். அதுமட்டுமில்லாமல் ஏ.ஆர். ரகுமானுக்கு சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர்.
ஏ ஆர் ரஹ்மான் :
இவர் சிறுவயதில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான `வொன்டர் பலூன்’ என்ற நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 4 கீ போர்டுகளை வாசித்துப் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானர். உண்மையிலேயே சொல்லவேண்டுமென்றால் ஏ ஆர் ரஹ்மானுக்கு கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேண்டும் என்பது தான் சிறு வயது கனவாம். ஆனால், இவர் இசையின் மீது இருந்த ஈடுபாடு காரணமாக 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டார். பின்னர் பல இசைக் கச்சேரிகளில் கலந்து கொண்டு தன்னுடைய தனித்துவத்தை வெளிப்படுத்தி வந்தார்.
மேலும், இவர் உதவி தொகை பெற்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் வெஸ்டர்ன் கிளாசிக்கல் மியூசிக் பட்டமும் பெற்றார். அதற்குப் பின்னர் தான் இவர் இளையராஜாவின் இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின் எம்எஸ் விஸ்வநாதன், குன்னக்குடி வைத்தியநாதன், ரமேஷ் நாயுடு உள்ளிட்ட பல இசைக் கலைஞர்களுடன் இவர் பணியாற்றியுள்ளார்.
இசையமைத்த முதல் படம் :
இவர் திரைத்துறையில் இசை அமைப்பதற்கு முன் விளம்பரப் படங்களுக்கு தான் இசையமைத்து வந்தார். மேலும், இவர் முதன் முதலாக இசை அமைத்தது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான “யோதா” என்ற திரைப்படத்துக்கு தான். ஆனால், இந்த படம் வெளியாவதற்கு முன்னர் தமிழில் ரோஜா படம் வெளியானதால் ரோஜா படமே ரகுமானின் முதல் படமாக மாறியது.
தாய் மீது கொண்ட அன்பு :
ஏ ஆர் ரஹ்மான் பிறப்பால் இந்து என்றாலும் அவர் விரும்பியே இஸ்லாம் மதத்தை ஏற்றார். அவரது உண்மையான பெயர் திலீப் குமார் தான். அதே போல சிறு வயதிலேயே ஏ ஆர் ரஹ்மான் தன் தந்தையை இழந்து தாயின் வளர்ப்பில் தான் வளர்ந்து வந்தார். அதனால் தன் தாய் மீது எப்போதும் அன்பும் மரியாதையும் உண்டு. இப்படி ஒரு நிலையில் ஏ ஆர் ரஹ்மானின் தாயார் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி வயது மூப்பு காரமான காலமானார்.
தாய்க்கு பிரம்மாண்ட கல்லறை கட்டிய ரஹ்மான் :
அவரது இறப்பிற்கு பல்வேறு பிரபலங்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர். தன் தாய் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவருக்காக தாஜ்மகால் போன்ற தோற்றம் கொண்ட ஒரு நினைவிடத்தை ரகுமான் கட்டி இருக்கிறார்.சென்னையில் அமைந்துள்ள இந்த நினைவிடத்துக்கு சமீபத்தில் எழுத்தாளர் நாகூர் ரூமியை அழைத்துச் சென்றுள்ளார் ரகுமான். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.