1989 ஆம் ஆண்டு ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தார். மேலும் இவரது தாய் ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞசர் என்பதால் இவருக்கும் தனது சிறு வயதிலேயே நடனத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதனால் குச்சிப்புடி கலையை முறையாக கற்றுத்தேர்ந்தார்.
தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறையில் ஈடுபட்ட போது தான் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததது. 2005 இல் "அந்தரிவாடு" என்ற தெலுங்கு படத்தில் துணை நடிகையாக நடித்து சினிமா துறைக்குள் அறிமுகமானார். அதற்கு பிறகு 2006 இல் அல்லேறி நரேஷுடன் "கீதகிதாளு" என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த படம் இவருக்கு நல்ல பிரபலத்தை பெற்றுத்தர. அதன் பின்னர் வரிசையாக பல தெலுங்கு படத்தில் நடித்து வந்தார்.
ஆனால் இதுவரை இவர் 2 தமிழ் படத்திலும் 1 ஹிந்தி படத்திலும் மட்டுமே நடித்துள்ளார். மேலும் உலகநாயகன் கமலஹாசன் நடித்த தூங்கா வானம் என்ற படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இவர் தமிழில் நடித்த "பதினாறு" மற்றும் "அவன் இவன் " என்ற இரு படத்திலும் பார்ப்பதற்கு கிராமத்து பெண்ணாக தான் இருந்தார்.
மேலும் சில ஆண்டுகளாக படங்களில் தோன்றாத இவர், தற்போது தனது உடலை சிக்கென்று மெருகேற்றியதோடு தனது தோற்றத்தியும் முழுமையாக மாற்றியுள்ளார். தற்போது இவரை நீங்கள் பார்த்தல் பாலா படத்தில் நடித்த நாயகியா இது என்று ஆச்சர்யத்தில் ஆழ்ந்து போவீர்கள்.




